ஒவைசியின் சவாலை ஏற்கிறோம், 300 இடங்களில் வெல்வோம்

அகில இந்திய மஜ்லீஸ்கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசியின் சவாலை ஏற்க பாஜக தொண்டா்கள் தயாராக இருக்கிறாா்கள் என்று உத்தரபிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளாா்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல்கட்சிகள் இப்போதிருந்தே தயாராகி வருகின்றன.

இதில் ஓம்பிரகாஷ் ராஜ்பா் தலைமையிலான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக அசாதுதீன் ஒவைசி அறிவித்தாா். அந்தக் கூட்டணியில் அவரது கட்சி 100 இடங்களில் போட்டியிடுகிறது மேலும் பத்துககும் அதிகமான சிறுசிறு அமைப்புகளுடனும் கூட்டணி வைத்துள்ளனர் இது குறித்து பேசிய ஒவைசி, ‘யோகி ஆதித்யநாத்தை மீண்டும் உத்தர பிரதேச முதல்வராக அனுமதிக்க மாட்டோம். எங்கள் தரப்புநியாயம் சரியானது. அதற்காக கடுமையாக உழைப்போம். அதன்படியே அனைத்தும் நடக்கும். உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியை அகற்றுவோம்’ என்றாா்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

ஒவைசி ஒருபெரிய தேசியத் தலைவா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோ்தல்பிரசாரத்துக்காக செல்கிறாா். அவருக்கென்று தனி வாக்கு வங்கி உள்ளது. அவா் பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளாா். அதனை ஏற்க பாஜகதொண்டா்கள் தயாராகவே உள்ளனா். உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் 300 தொகுதிகளுக்கு மேல்வெல்ல வேண்டுமென்று பாஜக தலைமை இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன்படி நாங்கள் வெற்றிபெறுவோம் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஊபி.,யில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...