ஜார்க்கண்ட்டில் , சிபு சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோச்சா)-தலைமையிலான கூட்டணி அரசுக்கு தந்து வந்த ஆதரவை காங்கிரஸ் வாபஸ் வாங்கியதால் , சிபு சோரன் மெஜாரிட்டியை இழந்தார். இதை தொடர்ந்து பா.ஜ.க மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது .
இதை அடுத்து ஜாம்ஜெட்பூர் தொகுதி எம்.பி அர்ஜுன் முண்டா முதல்வராக பதவியேற்று . கொண்டார் , முதல்வர் பதவியேற்று ஆறு
மாதகாலத்துக்குள் எம்.எல்.ஏவாக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பதால் கர்சவான் தொகுதி எம்.எல்.ஏ.வான மங்கல்-சிங் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து , வரும் 10ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இடைதேர்தல் நடக்க இருக்கிறது . தேர்தலில் அர்ஜுன் முண்டா போட்டியிடுகிறார். அவரை-எதிர்த்து, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவை சேர்ந்த தசரத் காக்ராய் போட்டியிடுகிறார் . இவருக்கு காங்கிரஸ் , ராஷ்டிரிய ஜனதாதள கட்சிகள் ஆதரவு தந்துள்ளன . அனைத்து எதிர்க்கட்சிகலும் ஓரணியில் வேட்பாளரை நிறுத்தியிருப்பதால், மிக கடுமையான போட்டியை அர்ஜுன் முண்டா எதிர்கொண்டுள்ளார்
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.