இலங்கையைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாத பயிற்சி அளித்துவருவதாக சுப்பிரமணியம் சாமி தெரிவித்துள்ளார் .
டெல்லியில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் உள்ள முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி தருகிறது . இதுமிகவும் ஆபத்தானது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு இலங்கை அரசுடன் ஒத்துழைக்கவேண்டும்.
இந்தியத் துணை கண்டத்திலிருந்து தீவிரவாத்த்தை விரட்டியடிக்க இந்தியாவும், இலங்கையும் இணைந்து செயல்படவேண்டியது முக்கியம். இது தொடர்பாக இலங்கையுடன் இந்தியா இணைந்து செயல்படவேண்டும், பேசவேண்டும். பாகிஸ்தானியர்களால் பயிற்சி தரப்படும் இலங்கை முஸ்லீம்கள் இந்தியாவுக்குள் குறிப்பாக தமிழகத்திற்குள் ஊடுறுவி வருகிறார்கள். இது அபாய கரமானது. பாஜக, தமிழக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துகொண்டு ஒருதவறை செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் தான் என்றார் சு.சாமி.
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
Leave a Reply
You must be logged in to post a comment.