மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னா விஸ் பதவியேற்று கொண்டார்

 மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் பா.ஜ.க முதல்வராக தேவேந்திர பட்னா விஸ் பதவியேற்று கொண்டார். மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பிரமாண்ட பதவி யேற்பு விழாவில் 9 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.

தேர்தல் முடிவுகள் வெளியான போது பாஜக மொத்தம் உள்ள 288 இடங்களில் 122 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

ஆட்சியமைக்க 145 இடங்கள்தேவை என்ற நிலையில், பாஜக வசப்படுத்திய இடங்களில் எண்ணிக்கை 122தான் என்பதால் பிறகட்சியின் ஆதரவை எதிர்பார்த்தது பாஜக. ஆனால், துணை முதல்வர் பதவி, முக்கிய இலாக்காக்களுடன் கூடிய அமைச்சர் பதவிகளை தங்களுக்கு அளித்தால் ஆட்சிக்கு ஆதரவு தர தயார் என்று சிவசேனா கெடுபிடிசெய்தது. இதனால் சிவசேனாவை ஒதுக்கியே வைக்க பாஜக திட்டமிட்டது.

இந்த நேரத்தில் தான் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிந்து 41 தொகுதிகளை வென்றுள்ள தேசியவாத காங்கிரஸ்கட்சி, பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வெளியிலிருந்து அளிக்க தயார் என்றது.

இதனிடையே மகாராஷ்டிரா பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவராக அதாவது முதல்வராக தேவேந்திர பட்னாவிசை அக்கட்சி எம்எல்ஏ.,க்கள் தேர்ந்தெடுத்தனர். இதைத்தொடர்ந்து, எந்த கட்சியின் ஆதரவையும் கோராமல் தனித்தே ஆட்சியமைக்க பாஜக முடிவு செய்தது. சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை மைனாரிட்டியாகவே ஆட்சியை தொடர பாஜக முடிவு செய்தது. இதையடுத்து மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடந்தது.

மராட்டிய ஆளுநர் வித்தியா சாகர் ராவ் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார். முதலில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். அவர் கடவுளின் பெயரால் பதவிபிரமாணம் செய்து கொண்டார். மகாராஷ்டிர மாநில வரலாற்றில் இவர் தான் முதலாவது பாஜக முதல்வராகும். மொத்தத்தில் தேவேந்திர பட்னாவிஸ் அம்மாநிலத்தின் 27வது முதல்வராகும்.

இதையடுத்து 7 அமைச்சர்களும், 2 இணை அமைச்சர்களும் பதவியேற்றனர். முதல்வரோடு சேர்த்து பத்துபேர் கொண்ட சிறிய அமைச்சரவை முதல்கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி இறுதி செய்த பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அமைச்சர்களாக பதவியேற்றவர்களில், ஏக்நாத் கட்சே, சுதிர் முன்கான் திவார், தவ்டே வினோத், பிரகாஷ் மேத்தா, சந்திர காந்த் பாட்டீல், விபத்தில் மரணமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மகள் பங்கஜாமுண்டே, விஷ்ணு சவ்ரா ஆகியோர் கேபினெட் அந்தஸ்துகொண்ட அமைச்சர்களாகும். திலிப் காம்ப்ளி, வித்யா தாக்கூர் ஆகிய இருவரும் இணை அமைச்சர்களாகும்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, கோவா, குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்டனர். இதே போல தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத்பவார், பிரபுல்பட்டேல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, பாலிவுட் பிரபலங்கள் விவேக் ஓபராய், ஆஷாபோஸ்லே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் விழாவில் பங்கேற்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...