இந்தியாவில் தாக்குதலை நடத்த தீவிரவாதிகளை பினாமிகளாக பயன்படுத்தும் பாகிஸ்தான்

 இந்தியாவில் தாக்குதலை நடத்த பாகிஸ்தான், தீவிரவாதிகளை பினாமிகளாக பயன்படுத்துவதாக அமெரிக்கா பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளது..

இந்தியாவில் தொடர்ந்து பாகிஸ்தான், தீவிரவாதிகளைக் கொண்டு நாச வேலைகளை அரங்கேற்றுகிறது.
பிரதமராக பதவி ஏற்ற பின்னர், கடந்த ஆகஸ்டு மாதம் 2ந் தேதி காஷ்மீர் மாநிலம்சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பாதுகாப்புபடையினர் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர், ''நமக்கு அருகில் இருக்கும் நாடு (பாகிஸ்தான்) நம்மிடம் மரபுசார்ந்த போர் புரியும் பலத்தை இழந்துவிட்டது. எனினும், நமது நாட்டில் தீவிரவாதத்தை தொடர்ந்து தூண்டி விட்டு மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது'' என குற்றம் சாட்டியிருந்தார்.

இப்போது பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை ஊர்ஜிதப்படுத்துவது போன்று அமெரிக்காவும் கூறியள்ளது. இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறி உள்ளதாவது :–

பாகிஸ்தானில் இயங்கிவருகிற தீவிரவாதிகள் இந்தியா, ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர். இது ஆப்கானுக்கு கேடாகவும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு தீங்காகவும் அமைகிறது.

ஆப்கானிஸ்தானில் செல்வாக்கை இழந்தநிலையில், தீவிரவாதிகளை அங்கு பாகிஸ்தான் மறை முகமாகப் பயன் படுத்துகிறது. இதேபோன்று வலுவான இந்திய ராணுவத்தை எதிர் கொள்வதற்கு தீவிரவாதிகளை பினாமிகளாக பயன்படுத்துகிறது.

இந்தியாவில் பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்பதற்கு 3 நாட்கள் முன்பாக ஆப்கானிஸ்தானில் ஹெராத்தில் உள்ள இந்திய துணைதூதரகம் தாக்குதலுக்கு ஆளானது. அங்கு ஆயுதம் ஏந்திய 4 தீவிரவாதிகள் கடும் தாக்குதல்கள் நடத்தினர். பிரதமர் மோடி இந்துதேசியவாத குழுக்களுக்கு நெருக்கமானவர் என்ற எண்ணத்தில், அவர் பதவி ஏற்புநேரத்தில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...