டாஸ்மாக் இல்லாத தமிழகம், லஞ்ச லாவண்யம் இல்லாத தமிழகம், மின்வெட்டில்லாத தமிழகம், மலர இந்தப் பொங்கல் வழிவகுக்கட்டும்

 மத்தியில் நம் மோதியின் தலைமையில் அமைந்துள்ள நல்லாட்சி பீடுநடை போட்டு வருகிறது. வங்கி கணக்கு இல்லாதவர்கட்கெல்லாம் வங்கிக்கணக்கு துவங்க 'மக்கள் நிதி திட்டம்' சமையல் எரிவாயுவுக்கான மானியம் மக்களுக்கு நேரடியாக வழங்கும் திட்டம், நாட்டில் தூய்மை பற்றிய விழிப்புணர்வும் லஞ்சம் ஒழிப்புணர்வும் ஏற்படுத்தும் திட்டம் போன்ற

பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் இந்த ஆட்சி மக்களின் வாழ்க்கையில் இன்பம் பொங்கும் ஆட்சியாகவும் மகிழ்ச்சி தங்கும் ஆட்சியாகவும் எங்கும் நல்லாட்சி மிளிரும் ஒரு சிறந்த ஆட்சியாகவும் ஒரு புதிய சூழ்நிலையை பாரத தேசத்தில் பதிய வைத்திருக்கிறது.

லஞ்சம், ஊழல், கடன் கருப்புபணம், வேலைவாய்பின்மை போன்ற பழையனவைகள் கழிந்து வேலை வாய்ப்பு, நேரடி மானியம், தூய்மை, வாய்மை, பசுமை, மகிழ்ச்சி போன்ற புதியன புகும் ஒரு புதிய பொங்கலாக இப்பொங்கல் மலர்ந்துள்ளது.

ஆரம்பத்திலேயே ஏற்பட்ட இந்த மகிழ்ச்சி இன்னும் போகப் போக பாரத தேசத்தில் ஓங்கி வளரும் உயர்ச்சியளிக்கும் முயற்சியில் நம் அரசு முனைந்துள்ளது. அதே நல்ல சூழ்நிலை தமிழகத்திலும் நிலவ, ஒரு டாஸ்மாக் இல்லாத தமிழகம், லஞ்ச லாவண்யம் இல்லாத தமிழகம், மின்வெட்டில்லாத தமிழகம், அடிப்படை கட்டமைப்புக்கள் உள்ள தமிழகம் மலர இந்தப் பொங்கல் வழிவகுக்கட்டும்.

இந்தப்பொங்கல் நம் தமிழர்களின் வாழ்க்கையிலும், இலங்கையில் வாழும் தமிழர்கள் வாழ்க்கையிலும் இன்பம் பொங்கும் பொங்கலாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கட்டுண்ட ஜல்லிக்கட்டும் நாம் மேற்கொண்டுள்ள முயற்சியினால் கட்டவிழ்க்கப்பட்டு, கட்டுடல் காளைகளும் காளையும் கலாச்சார பொலிவுடன் விளையாடும் பொங்கலாகவும் இப்பொங்கல் அமையும் என்று நம்புவோமாக.

தமிழகத்தில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநில தலைவர். டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...