உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று (பிப்.,05) காலை 11 மணிக்கு பிரதமர் மோடி புனித நீராடுகிறார்.
அதிகாரிகள் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, பிரதமர் மோடி காலை 10:00 மணிக்கு பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் தரையிறங்குவார், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நைனியில் உள்ள டில்லி பப்ளிக் பள்ளி மைதானத்தை அடைவார்.
காலை 10:45 மணிக்கு, அவர் அரேல் காட் சென்றடைவார், பின்னர் சங்கமத்திற்கு படகு சவாரி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை, மோடி சுமார் அரை மணி நேரம் கும்பமேளா நிகழ்வில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
144 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மஹா கும்ப மேளா, ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மற்றும் உலகம் முழுவதிலிருந்து கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |