தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும்; பொன் ராதாகிருஷ்ணன்

தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றி மே மாதத்தில் நடைபெறும் வகையில் அட்டவணையை மாற்றி-அறிவிக்க வேண்டும் என்று , தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

தமிழகதேர்தல் வரும் ஏப்ரல் 13ந் தேதி நடைபெறும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிக்கை தமிழக மக்களின் மனஉயர்வை புரிந்து கொள்ளாமல் அறிவித்ததாகவும் .

 

தமிழகம் எங்கும் தமிழ்-புத்தாண்டு ஏப்ரல் 14ந்-தேதி அதாவது சித்திரை 1ந் தேதி வர இருக்கிறது . தமிழக அரசு தமிழ் புத்தாண்டுதினத்தை தை1ந் தேதிக்கு அரசின்-அறிக்கையின் வாயிலாக மாற்றி இருந்தாலும் தமிழக மக்கள் இன்றும் சித்திரை 1ந் தேதியையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர் .

எனவே தமிழ்-புத்தாண்டிற்கான முன் தயாரிப்புகளை ஒரு சில நாட்களுக்கு முன்பாகவே துவக்குவார்கள். மக்களின் உணர்வோடு-கலந்துவிட்ட இந்த தமிழ் புத்தாண்டிற்காக வீடுகளை-தயார்படுத்தவும் வழி பாட்டுத்தலங்களை தயார் படுத்துவதிலும் மும்முரமாக இருக்கும் ஏப்ரல் 13ந் தேதி தமிழக சட்டசபை தேர்தல் சித்திரை விழாவை சீர்குலைக்கும் செயல் என்று கருதுகிறேன்.

தேர்தல் ஆணைய அறிக்கைப்படி ஏப்ரல் 13ந்தேதி நடக்கும் தேர்தலின் வாக்கு-எண்ணிக்கை மே 13ந்-தேதி வைத்துள்ளது. வாக்கு பதிவு எந்திரத்தை ஒருமாதகாலம் காக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்த கால இடைவெளியில் தவறுகள் நடைபெற அதிக வாய்ப்பு உண்டு . தேர்தல் பிரசார ஒலி பெருக்கிகளும் பிரச்சனை தரும் மாணவர்களின் கவனத்தை படிப்பில் இருந்து திசை திருப்பும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...