சாமானியருக்கும் முகேஷ் அம்பானிக்கும் ஒரே கொள்கையே

 கடுமையான சட்ட திட்டங்களை, நடைமுறைகளை முகேஷ் அம்பானிக்காக மட்டுமே அகற்றமுடியாது, சாமானியருக்கும் முகேஷ் அம்பானிக்கும் ஒரே கொள்கையே என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளுக்கு பிரதமர் அளித்துள்ளபேட்டியில், "அனைவருக்குமான நல்லாட்சியே அரசின்பணி. எங்கள் அரசு கொள்கைகளை உருவாக்குகிறது, அதில் பொருத்திக்கொள்ள முடிந்தால் வரவும் அல்லது எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்.

என்னுடைய வேலை அனைவருக்கும் ஊட்டிவிடுவதல்ல. நாட்டின் தனியார் துறையினர் ஆட்சியின் சட்டதிட்ட நடை முறைகளைப் பற்றியே சிந்தித்து வருகின்றனர். இதில் வரிபயங்கரவாதம், தீர்வை விதிப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விலக்கு ஆகியவை அடங்கும்.

அதனால் தான் 2015-16 நிதிநிலை அறிக்கையில் இத்தகைய சிக்கல்கள் உள்ள பலவிவகாரங்களை எடுத்துரைத்தோம். அவற்றை சரி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய நடை முறைகள் கோடிக் கணக்கான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதில் முக்கிய அடிவைப்புகளாகும்.

நான் மீண்டும் அனைவருக்குமான உத்தரவாதத்தை அளிக்கிறேன், "நீங்கள் ஒரு அடி எடுத்துவைத்தால், உங்களுக்காக நாங்கள் 2 அடி எடுத்துவைப்போம்" என்றார் மோடி.

அயல்நாட்டு முதலீட்டாளர்கள் பலருக்கு வரிக்கான நோட்டீஸ்கள் அனுப்பப் பட்டது உட்பட வர்த்தகத்துக்கு எளிதான சூழ்நிலை இல்லையே என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திரமோடி இவ்வாறு பதில் அளித்தார்.

மேலும் வங்கித்துறையில் முக்கியஸ்தரான தீபக்பரேக், சமீபத்தில் 9 மாதகால பாஜக ஆட்சியில் வர்த்தகத்துக்கான எளிதான சூழல் அமைய வில்லை, இந்த விவகாரத்தில் மாற்றங்கள் எதுவும் ஏற்பட வில்லை என்று அவர் சாடியிருந்தார். இதேதொனியில் பிற தொழில்துறை அதிபர்களும் மோடியின் இது நாள் வரையிலான ஆட்சியை விமர்சனம் செய்திருந்தனர்.

இதுபற்றிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "முதலில் ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் அரசு சாமானிய மக்கள் நலன்களுக்காக பாடுபட்டுவருகிறது. நாட்டின் ஏழை மக்களுக்குத் தான் எங்கள் முன்னுரிமை. நல்ல செயலூக்கமுள்ள இடைவெளியற்ற நல்லாட்சியையே நாங்கள் அளிக்க விரும்புகிறோம். இதன்முடிவுகள் அனைத்துத் துறைகளிலும் வெளிப்படையாக தெரிகிறது.

நாங்கள் வளர்ச்சிக்கான நடை முறைகளை முடுக்கி விட்டதன் பயன்களை தொழிற் துறையினர் மனமுவந்து ஏற்கவேண்டும்.

காங்கிரஸ் கட்சியினர் எங்கள் அரசை தொழிலதிபர் களுக்கான ஆட்சி என்று குற்றம்சாட்டுகிறது, ஆனால் தொழிற் துறையினரோ நாங்கள் அவர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கின்றனர்.

நாட்டின் சட்ட திட்ட நடைமுறைகள் முகேஷ் அம்பானிக்கு மட்டுமல்ல, சாமானிய மக்களுக்கும் தான்.

என்ன சூழ்நிலையில் மக்கள் எங்களை ஆட்சிக்குக் கொண்டுவந்தனர்? இப்போது என்ன சூழ்நிலை? எங்காவது கொள்கைமுடக்கம் இருக்கிறதா? இல்லை. வெளிப்படைத் தன்மை விவகாரம் உள்ளதா? இல்லை. அரசு செயலற்று இருக்கிறதா? இல்லை. மாறாக முழுதும் செயலூக்கமே உள்ளது" இவ்வாறு கூறியுள்ளார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...