தமிழகத்துக்கு நல்லது செய்வதாக பிரதமர் உறுதியளித்தார்

 திமுக,, பாஜக உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகளுடன் டெல்லி சென்ற தே.மு.தி.க தலைவர் விஜய காந்த், பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து காவிரியில் அணைகட்டுவதை தடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மனு அளித்தார்.

பிரதமரை சந்திப்பதற்காக விஜயகாந்த் நேற்று காலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சிசிவா, காங்கிரஸ் மாநில பொருளாளர் நாசே.ராமச் சந்திரன், ஊடக பொறுப்பாளர் கோபண்ணா, தமாகா சார்பில் எஸ்ஆர்.பாலசுப்ர மணியம், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க முன்னாள் எம்.பி. கணேச மூர்த்தி, ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், புதியதமிழகம் சார்பில் விஜய குமார் ஆகிய 10 கட்சிகளின் பிரதிநிதிகளும் தனித்தனியாக டெல்லி சென்றனர்.

அங்கு விஜய காந்த் தலைமையில் அனை வரும் ஒன்றாக இணைந்து நாடாளு மன்றத்தின் மைய மண்டபத்தில் மதியம் 12.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். தமிழக குழு வினருடன் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனும் சென்றிருந்தார். அப்போது, தமிழக பிரச்சினைகள் தொடர்பாக பிரதமரிடம் மனு அளிக்கப் பட்டது.

அந்தமனுவில், 'காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகம் முயற்சித்து வருகிறது. இலங்கை கடற் படையால் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவது தொடர்கிறது. ஆந்திர மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களுக்கு அந்தமாநில அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதுடன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேற்கண்ட பிரச்சினைகளில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

பிரதமரை சந்தித்த பிறகு நிருபர்களிடம் விஜய காந்த் கூறியதாவது:

எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் கூறினார். ஆந்திரத்தில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பேசுவதாகவும் தெரிவித்தார். 'நிலம் கையகப்படுத்தும் சட்டத்தால் பாதிப்பு வராது. தனியார் யாரும் நிலத்தை கைப்பற்ற மாட்டார்கள். நிலத்தை அரசுதான் கையகப்படுத்தும். அந்த நிலங்களில் அரசு மருத்துவமனைகளும், ரயில் பாதைகளும் அமைக்கப்படும்' என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

மேலும் மீனவர் பிரச்சினைக்கு விரைவில் சுமுக தீர்வு ஏற்படும் என்றும் கூறினார். பிரதமரை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை. தமிழகத்துக்கு நல்லது செய்வதாக பிரதமர் உறுதியளித்தார். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...