நில எல்லை வரையறை மசோதா அனைத்து கட்சி தலைவர்களுக்கு பிரதமர் நன்றி

 வங்க தேசத்துடனான எல்லை பிரச்னையை தீர்க்க வகைசெய்யும், நில எல்லை வரையறை மசோதா, மக்களவையிலும் வியாழக் கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, மசோதாவை நிறைவேற்ற உறுதுணையாக இருந்ததற்காக அனைத்து கட்சி தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

வங்கதேசப் பகுதிகளுக்கு இடையிடையே இருக்கும் இந்தியப்பகுதிகளை அந்நாட்டிடம் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக இந்தியாவில் இருக்கும் வங்கதேச பகுதிகளை எடுத்துக்கொள்வதற்கு நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறும்வகையில், நில எல்லை வரையறை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேறிய அந்த மசோதா, அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மக்களவையிலும் வியாழக் கிழமை நிறைவேறியது.

இதையடுத்து, தனது இருக்கையில் இருந்து எழுந்துசென்ற மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே ஆகியோரிடம் நன்றி தெரிவித்தார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய், திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், மேகாலயா முதல்வர் முகுல் சங்மா, மிúஸாரம் முதல்வர் லால்தன் ஹாவ்லா ஆகியோரைத் தொடர்புகொண்டு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜவாதி தலைவர் முலாயம் சிங், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் உள்ளிட்டோருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இதனிடையே, "நில எல்லை வரையறை மசோதா நிறைவேறியிருப்பது இந்தியாவின் இராஜதந்திரத்துக்கு கிடைத்துள்ள வெற்றி' என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனாவைத் தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நில வரையறை மசோதா நிறைவேறியதற்காக வங்கதேச மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...