அரசியல் கட்சிகளின் சூழ்சிகளுக்கு பலியாகி விட வேண்டாம்

 அரசியல் கட்சிகளின் சூழ்சிகளுக்கு சென்னை ஐஐடி மாணவர்கள் பலியாகி விட வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்ட அறிக்கையில், ''ஐஐடி பெயரை பயன் படுத்தி தங்கள் சொந்த கருத்துகளை வெளியிட்டதாலும், நாட்டின் தலை வர்களை இழிவு படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் சென்னை ஐஐடியில் செயல்பட்டு வந்த மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதை சென்னை ஐஐடி இயக்குநர் சிவகுமார் சீனிவாசன் தெளிவுபடுத்தியுள்ளார். தன்னாட்சி நிறுவனமான சென்னை ஐஐடி, சூழ் நிலையை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆனால், இதற்கு மத்திய அரசு காரணம் என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, கல்விவளாகத்தை அரசியல் வளாகமாகமாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு ஐஐடி மாணவர்கள் பலியாகிவிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். மாணவர்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அரசியல் நடத்தவேண்டாம் என அரசியல் கட்சிகள், இயக்கங்களையும் வேண்டிக் கொள்கிறேன்.

மாணவர்களின் கருத்து சுதந்திரத்துக்கு எந்த தடையும் இல்லை என ஐஐடி நிர்வாகம் தெளிவு படுத்தியுள்ளது. அங்கு பல அமைப்புகள் தொடர்ந்து செயல் படுகின்றன. கருத்து பரிமாற்றங்களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், இந்த சூழ்நிலையை பயன் படுத்தி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி போன்றோர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்து கருத்துரிமையின் கழுத்தைநெரித்தவர்கள் கருத்து சுதந்திரம் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. கல்விநிலையங்களில் அரசியல் தூண்டுதல், மாணவர்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்'' என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...