ஆம் ஆத்மியின் இரட்டை முகத்தை இன்று நாம்பார்க்கிறோம்

 ஆம் ஆத்மிகட்சி எம்எல்ஏ.க்களின் போலியான பட்டப் படிப்பு சான்றிதழ் மற்றும் மனைவியை கொடுமைப் படுத்தியது தொடர்பான விவகாரங்கள் வெளியானதை அடுத்து, தனதுகட்சி உறுப்பினர்களுக்கு சுயநடத்தை சான்றிதழை அக்கட்சி வழங்கிய நிலையில் அது தவறாகிவிட்டது என்று டெல்லி பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.

இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத் யாய் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆம் ஆத்மியின் இரட்டை முகத்தை இன்று நாம்பார்க்கிறோம். ஒன்று சட்ட சபை தேர்தலுக்கு முன்பு நடந்தது. மற்றொன்று இன்று நாம்பார்ப்பது. அக்கட்சியினர் தங்களது உறுப்பபினர்களுக்கு சுயநடத்தை சான்றிதழ்களை வெளியிட்டது. அது தற்பொழுது தவறாகிவிட்டது.

ஆம் ஆத்மி கட்சியினர், தங்களது கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் சுத்த மானவர்கள் மற்றும் எதிர்க் கட்சியில் உள்ளவர்கள் நன்னடத்தை அற்றவர்கள் என்ற கொள்கையை பின்பற்று பவர்கள் என்று அவர் கூறியுள்ளார். டெல்லியின் முன்னாள் சட்டமந்திரி ஜிதேந்தர்சிங் தோமர் போலியான சான்றிதழ்களை தாக்கல்செய்தது மற்றும் மாளவியா நகர் எம்எல்ஏ. சோம் நாத் பார்தி மீது தன்னை கொடுமைப்படுத்தினார் என்று அவரது மனைவி குற்றச் சாட்டு கூறியது போன்ற விவகாரங்களை குறிப்பிட்டு உபாத்யாய் பேசியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம், கைது செய்யப் பட்டுள்ள ஊழல் அதிகாரிகள் குறித்த விவரங்களை வெளியிடவேண்டும் என்று அவர் கோரியுள்ளார். ஊழல் தொடர்பாக 35 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நகர்முழுவதும் அவர்களது போர்டுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் டெல்லி மாநகராட்சியை சேர்ந்த 2 பேர் சிறியளவிலான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் யார்? அவர்கள் டெல்லி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள். ஆனால், அதன்விவரங்கள் எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...