ஆம் ஆத்மியின் இரட்டை முகத்தை இன்று நாம்பார்க்கிறோம்

 ஆம் ஆத்மிகட்சி எம்எல்ஏ.க்களின் போலியான பட்டப் படிப்பு சான்றிதழ் மற்றும் மனைவியை கொடுமைப் படுத்தியது தொடர்பான விவகாரங்கள் வெளியானதை அடுத்து, தனதுகட்சி உறுப்பினர்களுக்கு சுயநடத்தை சான்றிதழை அக்கட்சி வழங்கிய நிலையில் அது தவறாகிவிட்டது என்று டெல்லி பாஜக குற்றம் சுமத்தியுள்ளது.

இதுகுறித்து டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத் யாய் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆம் ஆத்மியின் இரட்டை முகத்தை இன்று நாம்பார்க்கிறோம். ஒன்று சட்ட சபை தேர்தலுக்கு முன்பு நடந்தது. மற்றொன்று இன்று நாம்பார்ப்பது. அக்கட்சியினர் தங்களது உறுப்பபினர்களுக்கு சுயநடத்தை சான்றிதழ்களை வெளியிட்டது. அது தற்பொழுது தவறாகிவிட்டது.

ஆம் ஆத்மி கட்சியினர், தங்களது கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் சுத்த மானவர்கள் மற்றும் எதிர்க் கட்சியில் உள்ளவர்கள் நன்னடத்தை அற்றவர்கள் என்ற கொள்கையை பின்பற்று பவர்கள் என்று அவர் கூறியுள்ளார். டெல்லியின் முன்னாள் சட்டமந்திரி ஜிதேந்தர்சிங் தோமர் போலியான சான்றிதழ்களை தாக்கல்செய்தது மற்றும் மாளவியா நகர் எம்எல்ஏ. சோம் நாத் பார்தி மீது தன்னை கொடுமைப்படுத்தினார் என்று அவரது மனைவி குற்றச் சாட்டு கூறியது போன்ற விவகாரங்களை குறிப்பிட்டு உபாத்யாய் பேசியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம், கைது செய்யப் பட்டுள்ள ஊழல் அதிகாரிகள் குறித்த விவரங்களை வெளியிடவேண்டும் என்று அவர் கோரியுள்ளார். ஊழல் தொடர்பாக 35 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நகர்முழுவதும் அவர்களது போர்டுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் டெல்லி மாநகராட்சியை சேர்ந்த 2 பேர் சிறியளவிலான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் யார்? அவர்கள் டெல்லி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள். ஆனால், அதன்விவரங்கள் எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...