யோகாசனம் என்பது ஆழ்மனம் சார்ந்த அரியகலையாகும்.

தற்போதைய சந்தைகளில் ‘தூய்மையான நெய்’ என்று விளம்பரப்படுத்தி விற்பதுபோல் ஆழ்மனம் சார்ந்த புராதாணக் கலையான யோகாசனத்தையும் சந்தைப்படுத்தி விலைபொருள் ஆக்கிவிடாதீர்கள்.

 

அமைதியான புதுயுகத்தை உருவாக்க யோகாபயிற்சி உதவிசெய்யும். ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்த ஐ.நா. சபைக்கும் அதையேற்று இன்று  யோகா தினத்தை கடைப்பிடிக்கும் உலக நாடுகளுக்கும் நன்றி.

பேராசை, வன்முறை, உடல் உபாதைகளை போக்கிகொள்ள செய்யப்படும் செலவினங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் யோகா முக்கிய பங்காற்றுகின்றது. கூட்டுமுயற்சி மற்றும் புவியின் சமச் சீர்நிலை ஆகியவற்றையும் மேம்படுத்துகின்றது.

தற்போது, சந்தைகளில் ‘தூய்மையான நெய்’ என்ற விளம்பர பலகைகளுடன் இருக்கும் கடைகளைபோல் 50 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் எந்த கடைகளையும் பார்த்ததில்லை. ஆனால், இன்று இப்படி விளம்பரப் படுத்தினால்தான் பணம் கிடைக்கும் என்பதால் இதைப் போன்ற கடைகள் பெருகிவருகின்றன.

யோகா சனத்துக்கும் இதே நிலை வந்து விடக்கூடாது. நான் கற்றுத்தரும் யோகாசனம் தான் சிறந்தது. மற்றவர்களிடம் போய் வெறும்மூக்கை பிடித்து உட்கார்ந்திருப்பதற்காக ஏன் பணத்தை செலவழிக் கின்றீர்கள்? என்று விளம்பரப்படுத்தும் அளவுக்கு யாரும் போய்விட கூடாது. ஏனெனில், யோகாசனம் என்பது வணிகம் சார்ந்ததோ, அமைப்பு சார்ந்ததோஅல்ல. இது, ஆழ்மனம் சார்ந்த அரியகலையாகும்.

யோகாசனத்தை விலைப் பொருளாக்க முயன்றால், இந்தகலைக்கு நாம் மிக அதிகமாக சேதம் ஏற்படுத்தி யவர்கள் என்றாகி விடுவோம். யோகா என்பது கடைசரக்கு அல்ல. அது விளம்பரத்தின் மூலம் விற்கப்படவேண்டிய பொருளும் அல்ல. புராதாண சிறப்புவாய்ந்த இந்தக் கலை எந்த ஒருதனிப்பட்ட நபருக்கோ, சமுதாயத்துக்கோ, நாட்டுக்கோ சொந்தமானத அல்ல; இந்த உலகம் முழுவதற்குமே சொந்தமானது.

2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியது 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...