மக்களவை தேர்தலின்போது பிரதமர் நரேந்திரமோடி அளித்த வாக்குறுதிப்படி, "நல்ல நாள்கள்' வருவதற்கு 25 ஆண்டுகள் பிடிக்கும் என பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா தெரிவித்ததாக வெளியான செய்திகளை பாஜக மறுத்துள்ளது.
இது தொடர்பாக பாஜக செயலாளரும், ஊடக பிரிவு பொறுப்பாளருமான ஸ்ரீகாந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஊழலை பாஜக ஒழித்து விட்டது; பணவீக்கத்தை கட்டுப்படுத்திவிட்டது , 5 ஆண்டுகளில் அதிக அளவுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க பாஜக பணியாற்றி வருகிறது. என்றுதான் அமித் ஷா தெரிவித்தார்
நல்ல நாள்கள் வருவதற்கு 25 ஆண்டுகள் பிடிக்கும் என அவர் ஒருபோதும் கூறவில்லை. அவ்வாறு வெளியான செய்திகள் அடிப்படையில்லாதவை. பாஜகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தீட்டப்பட்ட மிகப் பெரிய சதித்திட்டம் இது வாகும்.
கூட்டத்தில் பேசிய அமித்ஷா, இந்தியாவை உலகத்துக்கு மீண்டும் தலைவராக்கும் கனவு நனவாகுவதற்கு 25 ஆண்டுகள் பிடிக்கும் என தெரிவித்தார். அதாவது, தனதுபழைய பெருமையை இந்தியா மீட்டெடுப்பதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும் என்பதைத்தான் இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார் என்று ஷர்மா கூறினார்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.