தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது

 மத்தியிலும், மாநிலத்திலும் தேர்தல் கூட்டணியில் பாமக வெவ்வேறு கொள்கைகளை கடைப்பிடிக்கிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கேட்டுக் கொண்டார்.

பாஜக சார்பில் ஈரோட்டில் நடந்த மக்கள்தொடர்பு இயக்கம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழிசை சௌந்தரராஜன் நேற்று கோவைவந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் பங்கினால் தான் தருமபுரி நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வெற்றி பெற்றது என்பதை உணரவேண்டும். தேசியத்தில் கூட்டு, மாநிலத்தில் கூட்டு இல்லை என்பதை யாரும் நம்பமாட்டார்கள். எனவே வேறுபாட்டுத்தனமாக பேசுவதை அந்தக்கட்சி கைவிட வேண்டும்.

இரு திராவிட கட்சிகளின் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் பாமகவுக்கு உண்மையாக இருந்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட வேண்டும்.

தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது. அனைத்துத் துறை களிலும் ஊழல் பெருகியுள்ளது. அதானி குழுமத்துடன் மின்சார ஒப்பந்தத்தை எந்த அடிப்படையில் செய்து கொண்டது என்பது தொடர்பாக தமிழக அரசு தெளிவான அறிக்கையை வெளியிடவேண்டும்.

அதானி குழும விவகாரத்தில் வைகோ, இளங்கோவன் போன்றவர்கள் அடிப்படை ஆதாரமற்ற குற்றசாட்டுகளை முன்வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் வியாபம் ஊழல் என்பது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.

பாஜக முதல்வர்களின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். பாஜகவினர் குற்றமற்றவர்கள் என்பது விசார ணையில் தெளிவுபடுத்தப்படும்.

தமிழக காய்கறிகள் பரிசோதனை செய்து அதில் பூச்சிக் கொல்லி மருந்துகள் பாதிப்பில்லை என்பதை கேரள அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இங்கு, காய்கறி, மருந்துகள், பால்போன்றவை பரிசோதிக்க போதுமான வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.

காய்கறிகள் விவகாரத்தில் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...