பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்வரை எங்கள் போராட்டம் தொடரும்

 பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்வரை எங்கள் போராட்டம் தொடரும் மதுவிலக்கு வேண்டும் என ஒவ்வொருவரும் போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் 'எலைட்' மதுபான கடைகளை திறக்கப்போவதாக அரசு அறிவித்திருப்பது கண்டத்துகுரியது .என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

சென்னை பாஜக தலைமையகமான கமலால யத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் பாஜக ஒரு மாற்றுசக்தியாக உருவெடுத்து வருகிறது. காமராஜர் பிறந்தநாள் விழாவை பாஜக கொண்டாட தகுதி இருக்கிறதா? என்று காங்கிரசார் சொல்கிறார்கள். நாட்டுக்காக தன்னலமற்று உழைத்த தலைவர்களை போற்றும்கட்சி பாரதிய ஜனதா, எனவே, காமராஜர் விழாவை கொண்டாட பாஜகவிற்கு தகுதி உள்ளது

திருச்சியில் ராகுல் காந்தி நேற்று பேசும்போது, இப்போதுதான் அவருக்கு வாய்ப்புகிடைத்தது போல் பேசி இருக்கிறார். பல ஆண்டுகள் பதவியில் இருந்த அவர்கள் எத்தனைமுறை காமராஜர் விழாவுக்கு வந்தார்கள்? ராகுலின் வரவு தமிழகத்தில் எந்ததாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை.

புதிய மதுக் கொள்கையை கொண்டு வரப் போவதாக பேசி இருக்கிறார். அப்படியானால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எப்படிப்பட்ட மதுக் கொள்கையை வைத்திருக்கிறார்கள். ராகுல்கையில் அதிகாரம் இருந்தபோது இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். அதை கண்டித்து அவர் நாடாளுமன்றத்தில் ஏன் பேசவில்லை.

பூரண மது விலக்கை அமல்படுத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அடுத்தமாதம் மதுவிலக்கை கொண்டு வருவதற்கான அறிகுறி தென்படா விட்டால் மிகப்பெரிய போராட்டத்தை அறிவிப்போம்.

மதுவிலக்கு வேண்டும் என்று ஒவ்வொருவரும் போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் 'எலைட்' மதுபான கடைகளை திறக்கப் போவதாக அரசு அறிவித்திருப்பது கண்டத்துக்குரியது. ஒரு கடைகூட திறக்க விடாமல் தடுப்போம்.

சினிமாக்களில் மதுகுடிக்கும் காட்சிகளையும், புகைபிடிக்கும் காட்சிகளையும் தடுக்கவேண்டும். மதுகுடிக்கும் காட்சிகள் உள்ள திரைப்படங்களுக்கு வரிச்சலுகை தரக்கூடாது.

ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்றபிறகும் ஆட்சியில் வேகமும் இல்லை. மாற்றமும் இல்லை. தண்ணீர் பற்றாக் குறை பயமுறுத்துகிறது. இதையெல்லாம் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. தமிழகத்தில் 50 சதவீதம் ஏரிகள் முற்றிலும் ஆக்கிரமிக்கபட்டுள்ளது. மத்திய அரசு நிதி ஒதுக்கியும் தமிழக ஏரிகள் தூர்வாரப் படவில்லை என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...