இந்தியா-பாகிஸ்தான் இடையே 2 நாள் பேச்சுவார்த்தை

 இந்தியா-பாகிஸ்தான் இடையே தேசியபாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான 2 நாள் பேச்சுவார்த்தை, டெல்லியில் 23-ந்தேதி தொடங்குகிறது.

பிரதமர் மோடி, ரஷியாவில் உபா நகரில் நடந்த 'பிரிக்ஸ்' உச்சிமாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு ஆகியவற்றுக்கு சென்றிருந்த போது, அங்கு வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சென்ற மாதம் 10-ந் தேதி சந்தித்து பேசினார்.

அப்போது இருநாடுகளுக்கும் இடையே உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கும், இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் டெல்லியில் சந்தித்து பேசுவதற்கும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, டெல்லியில் இருநாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை 2 நாட்கள் நடக்கிறது. இந்த பேச்சு வார்த்தை 23-ந் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலும், பாகிஸ்தான் சார்பில் பிரதமரின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை ஆலோசகருமான சர்தாஜ் அஜிசும் கலந்துகொள்கிறார்கள்.

இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் சர்தாஜ் அஜிஸ், "23-ந் தேதியும், 24-ந்தேதியும் டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சு நடத்த இந்தியா தகவல் தெரிவித்துள்ளது" என கூறியதாக பாகிஸ்தான் ரேடியோ தெரிவித்தது.

அதே நேரத்தில், இது குறித்து பாகிஸ்தான் இன்னும் இறுதி செய்ய வில்லை என்றும், பேச்சுவார்த்தையின் போது இடம்பெற வேண்டிய அம்சங்கள் பற்றி முடிவு செய்ய வில்லை என்றும் சர்தாஜ் அஜிஸ் கூறியதாக பாகிஸ்தான் ரேடியோ தெரிவித்தது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, எல்லை தாண்டிய தீவிரவாதம், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஜாகி உர்ரகுமான் லக்விக்கு பாகிஸ்தான் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது, பிறபாதுகாப்பு விஷயங்கள், எல்லையில் அமைதியையும், சமாதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...