சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை பிரதமர் நரேந்திரமோடி வெள்ளிக்கிழமை வணங்கினார்.
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற தேசிய கைத்தறி நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி விமானம் மூலம் சென்னை மீனம் பாக்கம் விமான நிலையம் வந்தார். அங்கிருந்து விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழகத்துக்கு அடையாறு வழியாக காமராஜர் சாலையில் காரில்வந்தார்.
விவேகானந்தர் இல்லம் அருகில் வந்த போது அவரது காரின்வேகம் குறைக்கப்பட்டது. அப்போது காரில் இருந்த படியே விவேகானந்தர் இல்லத்தைப் பார்த்து மோடி வணங்கினார். மேலும், அப்போது சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த விவேகானந்தர் இல்லத்தை சேர்ந்த நிர்வாகிகள், பொது மக்களைப் பார்த்து மோடி கையசைத்தார்.
பிரதமர் மோடி சென்னை வரும் போது விவேகானந்தர் இல்லத்தைப் பார்வையிட திட்ட மிட்டிருந்ததாகவும், பாதுகாப்பு காரணங்களால் கடைசிநேரத்தில் அது தவிர்க்கப்பட்டதாகவும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
Leave a Reply
You must be logged in to post a comment.