பிகார் மக்கள் தக்கபாடம் புகட்ட வேண்டும்

 பிகார் மக்கள் மிகச்சிறந்த அறிவாளிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். மேலும், பிகார் சட்டப் பேரவை தேர்தலையொட்டி நிதீஷ்குமாரும், லாலு பிரசாத்தும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கைகோத்துள்ளதன் மூலம், ராம்மனோகர் லோஹியா, ஜெயபிரகாஷ் நாராயண் ஆகிய தலைவர்களின் கொள்கைகளை அவர்கள் குழிதோண்டி புதைத்து விட்டனர்

ராஷ்ட்ரீய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் பிகாரில் கடந்த 25 ஆண்டுகளாக, இனவாத-ஜாதிய அரசியலைத் தான் நடத்தி வருகின்றன. இதனால் தான் பிகார் இன்னும் பின்தங்கிய மாநிலமாகவே உள்ளது. இதனை பிகார் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். மிகச்சிறந்த அறிவாளிகளான அவர்கள், தங்களது மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, எதிர்வரும் பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டனர். எனவே, தேர்தலில் எங்களது கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது.

ராம் மனோகர் லோஹியா, காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிராக போராடியதையும், ஜெயபிரகாஷ் நாராயணை அப்போதைய காங்கிரஸ் அரசு சிறையில் தள்ளியதையும் அவர்கள் (நிதீஷ், லாலு) மறந்து விட்டனர். இதற்காக, தேர்தலில் அவர்களுக்கு பிகார் மக்கள் தக்கபாடம் புகட்ட வேண்டும்.

பிகார் மாநிலத்துக்கு அண்மையில் நான் ரூ.1.25 லட்சம் கோடி சிறப்பு நிதியை அறிவித்தேன். இதனை, நிதீஷ் குமார் ஏளனத்துடன் விமர்சித்தார். ஆனால், தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு அவர், தனது சொந்த மாநிலத்துக்கு ரூ.2.7 லட்சம் கோடி சிறப்பு நிதியை அறிவித்துள்ளார். எனக்கு போட்டியாக நிதீஷ் குமார் இவ்வாறு அறிவித்து, பிகார் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார். ஆனால், அவரது இந்த அறிவிப்பின் உள்நோக்கத்தை பிகார் மக்கள் நன்கு அறிவார்கள் என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...