அப்துல்கலாம் சாலையில் வசிப்பதை பெருமையாக கருதுகிறேன்

 டில்லியில், அப்துல்கலாம் பெயர் சூட்டப்பட்ட பகுதியில் வசிப்பதில் பெருமைப்படுகிறேன்,'' என, மத்திய அமைச்சரும், பா.ஜ.க, மூத்த தலைவருமான, வெங்கையா நாயுடு பேசினார்.

தயக்கம்:டில்லியில் நடந்த புத்தகவெளியீட்டு விழாவில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர், வெங்கையா நாயுடு பேசியதாவது:டில்லியில், 30, அவுரங்கசீப் சாலை என்ற முகவரியில்தான் வசித்து வந்தேன். முன்பு, என் முகவரியை யாருக்காவது தெரிவிக்கும் போது, தயக்கமும், கூச்சமும் ஏற்படும். இப்போது, அதெல்லாம் எதுவும் இல்லை; அந்தசாலை, அப்துல் கலாம் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மண்ணின் மைந்தனும், முன்னாள் ஜனாதிபதியுமான, மறைந்த, அப்துல்கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பகுதியில் வசிப்பதில் பெருமைப் படுகிறேன். வெளிநாட்டை சேர்ந்தவரின் பெயருக்கு பதிலாக, இந்த மண்ணின் மைந்தனின் பெயர் சூட்டப் பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது.

'அவுரங்கசீப் சாலையை, பெயர் மாற்றம் செய்யவேண்டும்' என வலியுறுத்தியது, பா.ஜ.க.,வைச் சேர்ந்தவரோ, ஆர்எஸ்எஸ்., பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களோ அல்ல . பாகிஸ்தானில் பிறந்து, தற்போது கனடாவில் வசிக்கும் தாரிக்படேல் என்ற பத்திரிகையாளர் தான், இதை வலியுறுத்தியவர். கடந்த, 2013ல், அவர், டில்லிக்கு வந்தபோது, நகரின் முக்கியமான பகுதிக்கு அவுரங்கசீப் சாலை என பெயர் சூட்டப் பட்டுள்ளதை பார்த்து, அதிர்ச்சி தெரிவித்தார்.

அவுரங்கசீப்பின் பெயருக்கு பதில் , அவர் சகோதரர் தாரா சிக்கோவின் பெயரை சூட்டவேண்டும் என, அந்த பத்திரிகையாளர் கூறினார்.

நம் நாட்டை ஏராளமான முஸ்லிம் மன்னர்கள் ஆட்சிசெய்துள்ளனர். அவர்களில் பலர், நம் நாட்டுக்கு நன்மை செய்துள்ளனர். இதுதொடர்பான வரலாறுகள் தெளிவாக உள்ளன.

பிரிவினைக்கு பின், எல்லா முஸ்லிம்களுமே பாகிஸ்தானுக்கு சென்று விடவில்லை. பெரும்பாலான முஸ்லிம்கள், இந்தியாவிலேயே, இந்தியர்களாக இருக்கவிரும்பினர். இந்து என்பது, ஒரு மதம் அல்ல; அது, ஒரு கலாசாரத்தின் அடையாளம். இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...