மதச்சார்பற்ற கூட்டணி, விரக்தியடைந்த வர்களின் கூட்டணி

 அரசமைப்புச் சட்டத்துக்குள்பட்டு வரிவருவாயை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளலாம் என 14ஆவது நிதிக் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்துகோருவது பொருத்தமற்றது


 அரசமைப்புச் சட்டத்துக்குள்பட்டு, வரிவருவாயை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்துகொள்ளும் முறையை 14ஆவது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது.

 பிகாருக்கு ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புத்திட்டத்தை பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்துள்ளார்.  மேலும், செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு, ரூ.40,000 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கு மேலும் பிகாருக்கு நிதிஒதுக்கப்படும்.

 முதல்வர் நிதீஷ்குமார் கூறுவதை போல், இந்த சிறப்பு நிதியுதவி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களாகவே இருக்கட்டும்.

 ஆனால், நிதீஷ் தலைமையிலான மதச் சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான முந்தைய மத்திய அரசு, அந்த திட்டங்களை ஏன் செயல்படுத்த வில்லை என்று நிதீஷ் அவர்களிடம் கேட்க வேண்டும்.

 பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் ஏற்கெனவே மூன்று கட்டங்களாக நடைபெற்ற வாக்குப் பதிவுகளில், பாஜக தலைமையிலான கூட்டணிக்கு பரவலான வரவேற்பு கிடைத்தது. இனிவரும் இரண்டு கட்ட வாக்குப் பதிவுகளிலும் அந்த வரவேற்பு நீடிக்கும்.

 பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு மீதான பிகார் மக்களின் நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும். மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் மாநில அரசை மக்கள் விரும்பு கின்றனர்.


 மதச்சார்பற்ற கூட்டணி, விரக்தியடைந்த வர்களின் கூட்டணியாகும். காங்கிரஸ் கட்சி தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கே பெரும்பாடுபட்டு வருகிறது. குடும்ப கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தில் ஒரு தலை முறை தேர்தல் களத்திலேயே நிற்கமுடியாது. அதனால், அடுத்த தலைமுறையை களத்தில் இறக்கியுள்ளது.

 மாட்டுத்தீவன ஊழலில் கைது செய்யப்பட்டு லாலுபிரசாத் சிறையில் இருந்தபோது, கட்சியில் இருந்து ஒருபகுதி தலைவர்களையும், தொண்டர்களையும் கவர்ந்திழுக்கலாம் என்று நிதீஷ்குமார் திட்டமிட்டிருந்தார்.


 ஆனால், அவருக்கு அதிர்ச்சிதரும் விதமாக லாலுபிரசாத் ஜாமீனில் வந்து விட்டார் என்றார் அருண் ஜேட்லி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...