தனி நாடு கோரும் சீக்கிய அமைப்புகளை ஒடுக்க வேண்டும்

 இந்தியாவில் சீக்கியர்கள் வாழும்பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் தனி நாடு கோரும் பிரசாரத்தை இங்கிலாந்தில் நடத்திவரும் சீக்கியர் அமைப்புகளை ஒடுக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் கேமரூனிடம் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் கேமரூனை சந்தித்துபேசிய பிரதமர் மோடி, இங்கிலாந்தில் செயல் படும் சீக்கிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க கடும் நடவடிக்கைதேவை என வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் பஞ்சாப் மற்றும் சீக்கியர் வாழும்பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ் தான் தனி நாடு கோரி முன்னர் ஆயுத போராட்டம் நடைபெற்றது. 1980களின் தொடக்கத்தில் இந்த ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தாலும் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா  நாடுகளில் குடியேறிய சீக்கியர்கள் இந்தபிரசாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தும் டிவி சேனல்களை கூட இங்கிலாந்தில் சீக்கிய அமைப்புகள் தொடங்கியுள்ளன. பாகிஸ்தான் உளவுஅமைப்பான ஐ.எஸ்.ஐ. உடன் சேர்ந்து இந்தியாவில் நாச வேலைகளுக்கு இந்த காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்ட மிட்டுள்ளனர். இதனால் இந்த அமைப்புகளை இங்கிலாந்து அரசு ஒடுக்கவேண்டும் என்று கேமரூனிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...