இந்தியாவில் சீக்கியர்கள் வாழும்பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் தனி நாடு கோரும் பிரசாரத்தை இங்கிலாந்தில் நடத்திவரும் சீக்கியர் அமைப்புகளை ஒடுக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் கேமரூனிடம் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் கேமரூனை சந்தித்துபேசிய பிரதமர் மோடி, இங்கிலாந்தில் செயல் படும் சீக்கிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க கடும் நடவடிக்கைதேவை என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் பஞ்சாப் மற்றும் சீக்கியர் வாழும்பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ் தான் தனி நாடு கோரி முன்னர் ஆயுத போராட்டம் நடைபெற்றது. 1980களின் தொடக்கத்தில் இந்த ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தாலும் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா நாடுகளில் குடியேறிய சீக்கியர்கள் இந்தபிரசாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தும் டிவி சேனல்களை கூட இங்கிலாந்தில் சீக்கிய அமைப்புகள் தொடங்கியுள்ளன. பாகிஸ்தான் உளவுஅமைப்பான ஐ.எஸ்.ஐ. உடன் சேர்ந்து இந்தியாவில் நாச வேலைகளுக்கு இந்த காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்ட மிட்டுள்ளனர். இதனால் இந்த அமைப்புகளை இங்கிலாந்து அரசு ஒடுக்கவேண்டும் என்று கேமரூனிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.