சரக்கு மற்றும் சேவைவரி மசோதா நிறைவேற அனைத்து தரப்பு முயற்சிகளையும் மேற்கொள்வோம்

 சரக்கு மற்றும் சேவைவரி மசோதா நிறைவேறுவதற்கு எதிர்கட்சிகளின் ஆதரவை பெற அரசு அனைத்து தரப்பு முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று நிதித் துறை அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். துபாயில் ஐக்கிய அரபு எமிரேட்இந்திய பொருளாதார அமைப்பின் 2015ம் ஆண்டிற்கான மாநாடு நேற்று நடைபெற்றது.

இந்தமாநாட்டில் கலந்துகொண்ட மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது சரக்கு மற்றும் சேவைவரி மசோதாவை நிறைவேற்ற எதிர் கட்சிகளின் ஆதரவைபெற முயற்சிப்போம்.பொருளாதார சீரமைப்பு என்பது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிற நிகழ்வு ஆகும். கடந்த காலங்களில் எந்த சீரமைப்பு சட்டமும் நிறுத்தப் பட்டது இல்லை. ஆனால் தாமதம் ஆகி இருக்கிறது.சரக்கு மற்றும் சேவைவரி மசோதா பாராளுமன்றத்தின் மேலவையில் நிறைவேற வேண்டியிருக்கிறது. சரக்கு சேவைவரி பல மாநிலங்களின் வரிகளை ஒற்றை சந்தையில் உருவாக்கும்.

இந்த வரி மசோதா வருகிற 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம்  1ம் தேதிமுதல் அமல் படுத்த வேண்டியிருக்கிறது. பாராளுமன்றத்தி ல சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேறா விட்டால் அதற்கான காலக்கெடு தவறவிடப்படும். இந்த மாதம் 26ம் தேதியன்று பாராளுமன்ற குளிர் காலக்கூட்டத்தொடர் துவங்குகிறது. இந்ததொடரின் போது சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேறா விட்டால் அந்த சட்டத்தை உரிய கால கெடுவிற்குள் துவக்கமுடியாது. சரக்கு மற்றும் சேவைவரி மசோதா மக்களவையில் நிறைவேறிவிட்டது. இந்த மசோதாவிற்கு மாநிலங்களவையில் நிறைவேற வேண்டி இருக்கிறது.

(மாநிலங்களவையில் பாரதிய ஜனதாவிற்கு போதிய பெரும் பான்மை இல்லை) சரக்கு மற்றும் சேவைவரி மசோதா நிறைவேறுவதற்கு முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறது. அந்த மசோதாவில் சில திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று அந்த  கட்சி வலியுறுத்துகிறது. முக்கிய எதிர் கட்சியான காங்கிரஸ் சரக்கு மற்றும் சேவைவரி மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும் என நம்புகிறோம்.சீனாவில் பொருளாதார வளர்ச்சி மந்த மாகியுள்ளது. இதன் விளைவு இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மூல வணிக பொருட்கள் விலை இந்தியாவிற்கு சாதகமாகவே இருக்கிறது.

உலகளவில் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டு இருந்தாலும் . கடந்த ஆண்டை க் காட்டிலும் இந்த ஆண்டு சிறந்தவளர்ச்சி பெற வேண்டி சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.(கடந்த 2014-15ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3சதவீதமாக இருந்தது.) இந்தியாவில் தொழில்கள் சுமூகமாக நடப்பதற்கு நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.மானியவிஷயத்தில்  மாற்றம் செய்ய எங்கள் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.சிலபகுதிகளில் இடையூறுகள் இருந்தாலும் பொருளாதார வளர்ச்சிக்கு நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...