ஊழலுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை வளர்த்து கொள்ளுங்கள்

 ஊழல் நோய் பீடிக்காத வகையில் நோய் எதிர்ப்புசக்தியை வளர்த்து கொள்ளுங்கள் என இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை கூறினார்.


2013-ம் ஆண்டு தொகுப்பை சேர்ந்த இளம் ஐஏஎஸ். அதிகாரிகள் 169 பேர், பிரதமர் மோடியை நேற்று சந்தித்தனர். இவர்கள் அவரவர் மாநிலங்களில் பணி அமர்த்தப் படாமல், டெல்லியிலேயே உதவி செயலாளர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களிடையே பிரதமர் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நாடுமுழுவதும் உள்ள மாவட்டங்களை நிர்வகிக்கக் கூடியவர்கள் நீங்கள். அடுத்த 10 ஆண்டுகள் உங்களுக்கு மிகவும் முக்கியமானவை. நாட்டின் ஐந்தில் ஒருபங்கு மாவட்டங்களில் நீங்கள் பணியாற்றிவிட முடியும்.

இந்தியா, புதிய உயரத்தை எட்டக் கூடிய பொன்னான வாய்ப்பு உள்ளது. நீங்கள் மாற்றத்தின் தூது வர்களாக இருந்து, இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

பதற்றமும், போராட்டமும் இருந்தால், மாற்றத்தை கொண்டு வர முடியாது. நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு மக்களை இணைக் கிறீர்களோ, அதில்தான் மாற்றம் இருக்கிறது. நாட்டுக்கு பலனளிக்கக்கூடிய ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.


சிலர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுத்துவிடுவதை பார்த்திருக்கிறோம். வேறுசிலரோ, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருப்பதையும் பார்த்திருக்கிறோம். அதற்கு நோய் எதிர்ப்புசக்திதான் காரணம். பரம்பரை ரீதியாக வரும் வலிமை, வைரஸ் காய்ச்சலை எதிர்த்துநிற்கிறது.

அது போல், நீங்கள் எங்கே சென்றாலும், சோம்பல்நோய் இருக்கலாம், சோர்வுநோய் இருக்கலாம், ஊழல் நோய் இருக்கலாம். இவற்றால் பீடிக்கப்படாத வகையில், நோய் எதிர்ப்புசக்தியை வளர்த்து கொள்ளுங்கள். வலிமையுடன் இருந்தால், நோய் தாக்கினால்கூட ஒரே ஒருமாத்திரையால் நோய் குணமாகிவிடும். ஒரு மாத்திரையே அவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால், மனிதர்களால் முடியாதா?

உங்களுக்கு ‘ஈகோ’ இருக்கக் கூடாது. குழுவாக பணியாற்றுங்கள். உங்கள் துறையில் அனுபவம் மிக்கவர்களிடமோ அல்லது ஓய்வு பெற்றவர் களிடமோ யோசனைகளை பெற்று செயல் படுங்கள்.

நாம் எங்கே இருந்தாலும், நமதுபொறுப்புகள் என்னவாக இருந்தாலும், நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று முடிவுசெய்து செயல்பட்டால், இந்நாடு முன்னேறும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...