விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை ஏற்று கொள்ளுங்கள்

விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை ஏற்று கொள்ளுங்கள் என்று விவசாயிகளுக்கு முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தி உள்ளார்.

நாக்பூரில் நடைபெற்று வரும் விவசாய திருவிழாவை முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய கப்பல் மற்றும் தரை வழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, ராஜஸ்தான் முதல்மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா, மத்திய ரசாயன மற்றும் உர மந்திரி ஹன்சுராஜ் அகிர் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில் கூறியதாவது:–

பருவநிலை விவசாயிகளிடம் கண்ணா மூச்சி ஆடுவதால் நாம் இயற்கையை சார்ந்திருக்க முடியாது. இது போன்ற சூழ்நிலையில், விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிய பயிர்களுடன் சோதனை நடத்தவேண்டும். இது விவசாயிகளின் நிதி நிலைமையை அதிகரிக்கும். மேலும் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் உதவியை விவசாயிகள் கண்டிப்பாக பெற்று, தங்களுடைய மன நிலையை மாற்றவேண்டும்.

 விவசாய உள்கட்டமைப்பில் முதலீடுசெய்யும் பொருட்டு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ரூ.2500 கோடி முதல் ரூ.3500 கோடிவரை நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசிடம் பரிந்துரைக்குமாறு மத்தியமந்திரி நிதின் கட்காரியிடம், தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தினார்.

பின்னர், நிதின்கட்காரி பேசும்போது, ‘‘விவசாயிகளுக்கு தடை இல்லாமல் மின்விநியோகம் அளித்தால், விவசாய உற்பத்தி பன் மடங்கு அதிகரிக்கும்’’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...