பாரம்பரிய அறிவினை உலகிற்கு பறை சாட்டியவர் விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் வலை தளத்தில் மோடி தனது வாழ்த்தினை பதிவு செய்துள்ளார்.

விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சத்தீஸ்கரில் நடைபெறும் தேசிய இளைஞர்தின விழாவில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாற்ற உள்ளார்.

முன்னதாக கர்நாடகாவில் சிலதினங்களுக்கு முன்பு நடைபெற்ற சர்வதேச யோகா ஆராய்ச்சி குறித்த கருத் தரங்கில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் பாரம்பரிய அறிவினை உலகிற்கு பறை சாட்டியவர் விவேகானந்தர் என்று புகழாரம் சூட்டினார்.

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ம் நாள் கொல்கத்தாவில் பிறந்தார். இவர் இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாக கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893ம் ஆண்டு அவர் சிகாகோவில் உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற் பொழிவுகள் உலகப் புகழ் பெற்றது. நல்ல இளைஞர்கள் நூறுபேரை தாருங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறினார். மேலும் இளைஞர்களுக்கு பல்வேறு கருத்துக்களை விவேகானந்தர் கூறியுள்ளார்.

1902-ம் ஆண்டு ஜூலை 4-ம் நாள், தனது 39-ம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம்முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...