உலகளாவிய வர்த்த எளிமை யாக்கல் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உலகளாவிய வர்த்த எளிமை யாக்கல் ஒப்பந்தத்தை இந்தியாவில் அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை புதன் கிழமை ஒப்புதல் அளித்தது.

 உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ) சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், உலகளாவிய வர்த்தக நடை முறைகளை எளிமைப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

 பல்வேறு நாடுகளிடையேயான சரக்கு போக்கு வரத்து நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப் பட்டுள்ளது.

 இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தில்லியில் புதன் கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப் பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

 அவற்றில் வர்த்தக எளிமையாக்கல் ஒப்பந்தத்துக்கு அனுமதி அளித்ததும் ஒன்றாகும். அந்த ஒப்பந்தம் அமல்படுத்தப் படுவதைக் கண்காணிக்க மத்திய வருவாய் மற்றும் வர்த்தக துறைச்செயலர்கள் அடங்கிய தேசியக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

 இதை மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 ஆயுஷ் அமைச்சக ஒப்பந்தம்: இந்தியப் பாரம்பரிய மருத்துவசிகிச்சை முறைகளை சர்வதேச அளவில் கொண்டுசேர்க்கும் நோக்கில் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலகசுகாதார அமைப்பு (டபிள்யூ.எச்.ஓ) இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர் வேதம், சித்தா, யோகா, யுனானி ஆகியவை குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

 அதுதொடர்பான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், பயிலரங்கங்கள், கருத்தரங்குகள் உள்ளிட்டவை ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலகசுகாதார அமைப்பு சார்பில் நடத்தப்படும்.

 மத்திய கொள்கை குழுவின் (நீதி ஆயோக்) தலைவர், தொலைத்தொடர்பு ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராக செயல்படுவதற்கு மத்திய அமைச்சரவை இசைவு தெரிவித்துள்ளது. திட்டக்குழு அமலில் இருந்தபோது, அதன்செயலர் தொலைத்தொடர்பு ஆணையத்தின் பகுதிநேர உறுப்பினராகப் பொறுப்பு வகிக்கும் நடைமுறை இருந்தது. திட்டக்குழுவுக்கு மாற்றாக தற்போது கொள்கை குழு நடைமுறையில் இருப்பதால் மத்திய அமைச்சரவை இந்த ஒப்புதலை அளித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...