உலகமேடையில் மோடியின் குரல் இன்னும் சக்திவாய்ந்ததாக ஒலிக்கிறது; ‘டைம்’ பத்திரிகை

உலகளவில் செல்வாக்கு மிக்கவர்களாக ‘டைம்’ பத்திரிகை வெளியிட்டுள்ள தேர்வுபட்டியலில் பிரதமர் மோடி, சானியா மிர்சா, பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.


அமெரிக்காவின் பிரபலபத்திரிகையான ‘டைம்’ வாரப்பத்திரிகை, உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இந்தபட்டியலில் இடம் பிடிப்பதை புகழ் மிக்கதாக அனைவரும் கருதுகின்றனர்.

இந்தபத்திரிகை கடந்தாண்டு வெளியிட்ட 100 பேர் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதில் மோடியின் சுயவிவரங்களை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எழுதியிருந்தது அனைவரையும் ஆச்சரியப் படுத்தியது.

 

அதன்படி இந்த ஆண்டுக் கான பட்டியலை ‘டைம்’ பத்திரிகை அடுத்தமாதம் வெளியிட உள்ளது. இதற்காக 127 பேர் அடங்கிய உத்தேசபட்டியலை அறிவித்துள்ளது. இதில் உலக தலைவர்கள், சிந்தனையாளர்கள், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


இந்த பட்டியலில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி குறித்து அந்தபத்திரிகை கூறுகையில், ‘உலகமேடையில் மோடியின் குரல் இன்னும் சக்திவாய்ந்ததாக ஒலிக்கிறது. உலக பொருளாதார வளர்ச்சியில் அவரது நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது’ என செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த 127 பேரில் இருந்து சிறந்த 100 பேரை தேர்ந்தெடுக்க டைம் பத்திரிகையின் வாசகர்கள் ஓட்டளிப் பார்கள். அதன் அடிப்படையில் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பெயர்களை பத்திரிகை நிர்வாகம் முடிவுசெய்து அடுத்தமாதம் வெளியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...