‘யுனெஸ்கோ’ உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ‘இது பெருமைமிக்க தருணம்’ என, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுதும் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் விதமாக, அது தொடர்பான ஆவணங்களை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாப்பதற்காக, ‘யுனெஸ்கோ’ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் சார்பில், சர்வதேச நினைவு பதிவேடு உருவாக்கப்பட்டது.
இதில், ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் அவற்றின் நெறிமுறைகள், மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம், பத்திரிகை சுதந்திரத்திற்கான உலகளாவிய, ‘விண்ட்ஹோக்’ பிரகடனம் உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்பின் முக்கிய ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்தாண்டு, ராம்சரித்மனாஸ், பஞ்சதந்திரம், சஹ்ருதயலோக -லோகனா ஆகிய மூன்று இந்திய இலக்கிய படைப்புகள், யுனெஸ்கோவின் உலக ஆசிய — பசிபிக் பிராந்தியப் பதிவேட்டில் சேர்க்கப் பட்டன.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில், புதிதாக 74 ஆவணங்கள் கடந்த 16ம் தேதி சேர்க்கப்பட்டு உள்ளன.
ஹிந்துக்களின் புனித நுாலான பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை இதில் அடங்கும்.
இதன் வாயிலாக, சர்வதேச அங்கீகாரம் பெற்ற இந்திய படைப்புகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இந்த அறிவிப்பை தன் சமூக வலைதள பக்கத்தில் வரவேற்று பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்.
‘காலத்தால் அழியாத நம் ஞானத்திற்கும், வளமான கலாசாரத்திற்கும் கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரம்.
‘கீதையும், நாட்டிய சாஸ்திரமும் பல நுாற்றாண்டுகளாக நாகரிகத்தையும், உணர்வையும் வளர்த்து வந்துள்ளன. அவற்றின் நுண்ணறிவுத் திறன் உலகிற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது’ என, கூறியுள்ளார்.
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |