தமிழிசை சவுந்தர ராஜன் போட்டியிடும் தொகுதி விரைவில் அறிவிக்கப்படும்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் போட்டியிடும் தொகுதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சரும், தேர்தல்குழு செயலாளருமான ஜே.பி.நட்டா கூறியுள்ளார். தமிழக சட்ட சபைக்கு வருகிற மே 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர்தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என மும்முரமான பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜகவும் கூட்டணி விஷயத்தில் தீவிரம் காட்டி வந்தது.

இதையடுத்து பாஜக சார்பில் போட்டியிடும் உத்தேச வேட்பா ளர்களின் பட்டியலுடன் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லிசென்றனர். டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தகூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தகூட்டத்தில் தமிழக சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் 54 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அறிவித்தார். வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் ஜேபி.நட்டா செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்காக ஏழு, எட்டு பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

அவற்றை பரிசீலித்து, தமிழிசை போட்டியிடும் தொகுதியை விரைவில் அறிவிப்போம் என்றார். தமிழகத்தில் பா.ஜனதாவுடன் இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுவதாகவும் அந்த கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடுவிவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...