தமிழக பாஜக.,வின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர் ராஜன், 2019-ம் ஆண்டில் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப் பட்டார். அதனையடுத்து, ஓரிருமாதங்கள் கழித்து பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப் பட்டார். பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப் பட்டதிலிருந்து அவர், தமிழகத்தில் பா.ஜ.க வளர்த்தெடுக்கத் தீவிரமுயற்சிகளை மேற்கொண்டார்.
இதன்படி தமிழ்நாடு முழுவதும் வேல்யாத்திரை அறிவித்தார். அதிமுக கூட்டணியில் இருந்தபோதும் ஆட்சிக்கு எதிராக வேல்யாத்திரை அறிவித்தார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டது. 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது.
இந்நிலையில் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி மந்திரிசபை, 2-வது முறையாக கடந்த 2019-ம் ஆண்டு மே 30-ந் தேதி பதவி ஏற்றது. 2 ஆண்டுகள் முடிந்தும் மத்திய மந்திரி சபையில் இதுவரை எந்தவிதமான மாற்றமோ, விஸ்தரிப்போ நடைபெறவில்லை.
இந்நிலையில் இன்று மாலை மத்திய மந்திரிசபை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கான 43 புதியமத்திய மந்திரிகளின் பட்டியல் வெளியிடபட்டது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் பெயர் இடம் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து புதிய மத்திய மந்திரிகளின் பதவியேற்பு விழா, இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அதில் மத்தியமந்திரியாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |