அனைவருக்கும் வீடுதிட்டத்துக்காக 26 மாநிலங்களில் சுமார் 2,508 நகரங்கள் தேர்வு

பிரதமரின் ஆவாஸ் யோஜனா என்ற அனைவருக்கும் வீடுதிட்டத்துக்காக 26 மாநிலங்களில் சுமார் 2,508 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதாவது நகர்ப்புற ஏழை மக்களுக்கான இந்த மலிவுவிலை வீட்டுத்திட்டம் பற்றி  நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய நகர்ப்புற அமைச்சர் வெங்கய்யா நாயுடு நாடாளுமன்றத்தில் கூறியதாவது:

ஏப்ரல் 25, 2016 நிலவரப்படி 26 மாநிலங்களில் 2,508 வீடுகள் பிரதமரின் அனை வருக்கும் வீடு திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நில நடுக்கங்கள், வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் விதத்தில் இந்தவீடுகள் வடிவமைக்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் நாடுமுழுதும் சுமார் 2 கோடி வீடுகள் கட்டப்படுகின்றன. அதாவது 7 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். 2015-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2022-ல் முடிவடையும். நகர்ப் புறங்களில் வாழும் குறைந்த ஊதியப்பிரிவினர் பயனடைவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நகர்ப்புற மக்களில் வீடற்றோருக்கு வீடுவழங்குவது மாநில அரசின் முதன்மை பொறுப்பாகும். மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு உதவும்விதமாக, மத்திய வீட்டு வசதித் துறை மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம், ‘நகர்ப்புற வீடட்டோருக்கு புகலிடம்’ என்ற திட்டத்தை நடைமுறைப் படுத்துகிறது.

இதுகுறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அளித்துள்ள தகவல்களின்படி இதுவரை 770 புகலிடங்கள் மாநிலங்களினால் வழங்கப் பட்டுள்ளது, இதில் 38,770 பேர் வசிக்கலாம். இடில் 270 புகலிடங்களில் 11,900 பேர் ஏற்கெனவே வசித்து வருகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...