சமூகத்தில் மதிப்புடன் இருக்கம் அமிதாப்பச்சன் விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டதில் தவறு இல்லை

பிரதமர் மோடி நரேந்திர மோடி தலைமையிலான மத்தியரசின் இரண்டாம் ஆண்டு வெற்றிவிழாவை ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்க இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.


 பிரதமர் தலைமையிலான மத்தியஅரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா, தில்லியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவினை, நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்குவதாக செய்திகள் வெளியாகின. அந்தநிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்புதெரிவித்துள்ளது.
 வரி ஏய்ப்புசெய்து வெளிநாடுகளில் கருப்புப்பணம் வைத்திருப்போரின் பட்டியலில் (பனாமா ரகசிய ஆவணம்) அமிதாப் பச்சனின் பெயர் இடம்பெற்றிருப்பதால், அதுதொடர்பான விசாரணை நேர்மையாக இருக்குமா? என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கேள்வியெழுப்பினார்.


 அதற்குப்பதிலளித்து அமிதாப் பச்சன் கூறுகையில், "அந்த விழாவை நடிகர் ஆர்.மாதவன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். மத்திய அரசின் "பெண் குழந்தைகளைக் காப்போம்' என்ற திட்டம் பற்றிய நிகழ்ச்சியில் மட்டும் நான்பங்கேற்கிறேன்' என்றார்.


 இந்நிலையில், அமிதாப்பச்சனுக்கு பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, மத்திய சட்ட அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சதானந்தா கெளடா கூறியதாவது:


 மத்திய அரசின்விழாவில் அமிதாப்பச்சன் பங்கேற்பதற்கும், கருப்புப் பணம் தொடர்பான அவர் மீதான விசாரணைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பனாமா ஆவணம்தொடர்பான புகாரை, சுதந்திரமான புலனாய்வு அமைப்பு விசாரிக்கும் என்றார் அவர்.


 இதேபோல், மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா, பாஜக செயலர் ஸ்ரீகாந்த் சர்மா, பாஜக எம்.பி. பரேஷ் ராவல் ஆகியோரும் அமிதாப்பச்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


 "பனாமா ஆவணத்தில் அமிதாப்பச்சனின் பெயர் இடம்பெற்றுள்ள போதிலும், அவர் குற்றவாளி என எந்த நீதி மன்றமும் தீர்ப்பளிக்கவில்லை; சமூகத்தில் மதிப்புடன் இருக்கம் அமிதாப்பச்சன் விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியினரிடம் எழுப்புவதற்கு தற்போது எந்தப்பிரச்னையும் இல்லை என்பதால், விழாவில் அமிதாப்பச்சன் பங்கேற்பதை பிரச்னை எழுப்புகிறார்கள்' என்று அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...