அமெரிக்காவில், ஒபாமாவை பிரதமர் சந்தித்து பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர் லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவுக்கு போய்சேர்ந்தார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்திசெல்லப்பட்ட சிலைகள் உள்ளிட்ட கலைபொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கல்பனா சாவ்லாவின் நினை விடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், நேற்றுமதியம், ஜனாதிபதி ஒபாமாவை பிரதமர் சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா-அமெரிக்கா இடையிலான ஆக்கப்பூர்வ அணுசக்தி ஒப்பந்தம்குறித்து இருவரும் விவாதித்தனர். இணையதள பாதுகாப்பு பற்றியும் பேச்சுநடத்தினர்.

பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அமெரிக்காவுடன் தோளோடுதோள் நின்று பணியாற்றுவதில் பெருமைப்படுவதாக மோடி குறிப்பிட்டார். இருநாடுகளின் பொருளாதார உறவை புதிய உயரத்துக்கு இட்டுச் செல்வது எப்படி என்பது பற்றி விவாதித்ததாக கூறினார்.

அதற்கு ஒபாமா, இருநாடுகளும் ஆழமான, பரந்த நட்புறவை கொண்டிருப்பது இயல்பானது என்று கூறினார். பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை கூடியவிரைவில் நடைமுறைப்படுத்துவது பற்றி மோடியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறினார். அணுசக்தி வழங்கும் குழுமத்தில் இந்தியாவை சேர்த்துக்கொள்வதற்கு ஒபாமா ஆதரவு தெரிவித்தார். அதற்கு மோடி நன்றி தெரிவித்து கொண்டார். இருநாடுகளின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

சர்வதேசளவில், அணு ஆயுதப் பரவலை தடுப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு ‘என்.எஸ்.ஜி.’ என்று அழைக்கப் படுகிற அணு சக்தி வழங்கும் குழுமம் செயல்பட்டுவருகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்தகுழுமத்தில் இந்தியா உறுப்பினராகசேர விரும்புகிறது. ஆனால் இதற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பெஞ்சமின்ரோட்ஸ், ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், அணு சக்தி வழங்கும் குழுமத்தில் இந்தியா இடம்பெற அமெரிக்காவின் உறுதியான ஆதரவை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்துகொண்டு நடைபோடுகிறோம். இந்தியா அணு சக்தி பாதுகாப்பு நாடு என்ற வகையில், அதனுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்து வதற்கு நிறைய நேரம் செலவிடுகிறோம் இவ்வாறு அவர் கூறினார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...