தொலை விடப்பகுதிகளில் நெடுஞ் சாலைகளில் விமானங்களை தரையிறக்கும் வசதியை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக நெடுஞ்சாலை, சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இது குறித்து மும்பையில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது:
தொலை விடப் பகுதிகளில் உள்ள நெடுஞ் சாலைகளில் விமானங்களை தரையிறக்கும் வசதியை கொண்டுவர பாதுகாப்புத்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திவருகிறோம். ஏனென்றால், அத்தகைய நெடுஞ் சாலைகள் எல்லைப்பகுதிக்கு அருகில் உள்ளன. இத்தகைய நெடுஞ்சாலைகள் தார் மற்றும் சிமென்ட் கலவையைக் கொண்டு அமைக்கப்பட உள்ளதால், விமானங்களின் எடையைத்தாங்கும்.
இந்தச்சாலைகளை நாம் தாற்காலிக விமான நிலையங்களாகவும் பயன் படுத்தலாம். இதன்மூலம், விமான நிலையங்களை அமைப்பதற்கும், அவற்றைப் பாராமரிப் பதற்கும் ஆகும் செலவை குறைக்கலாம்.
விமானங்கள் தரையிறங்கும் சமயத்தில் மட்டும் அந்தச்சாலையில் செல்லும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். விமானம் தரையிறங்கிய பிறகு, வாகனங்கள்செல்ல அனுமதிக்கப்படும். விமானங்கள் தரையிறங்கிய பிறகு, சாலையோ ரங்களில் நிறுத்துவதற்கு வசதியாக இடங்களை அமைக்கவும் ஆலோசனை செய்துவருகிறோம்.
இந்த சாலைகளில் பயணிகள்விமானம், ராணுவ விமானம் என இரண்டுவகை விமானங்களையும் தரையிறக்குவது குறித்தும் பரிசீலனை செய்துவருகிறோம் என்று நிதின் கட்கரி பேசினார்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.