நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்

இந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் மர்மம்! சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம்.

ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும். எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் உள்ள பிரபலமான சில சிவன் கோவில்கள்!!! மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது. கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.

நிலம் – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் நெருப்பு – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நீர் – திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில் ஆகாயம் – சிதம்பரம் நடராசர் கோயில் காற்று – திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில் சிவனின் இந்த பஞ்சபூத ஸ்தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude ) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது.

1) கேதார்நாத் – கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669)

2) காலேஷ்வரம் – காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067

3) ஸ்ரீ காலஹஸ்தி – ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410)

4) காஞ்சிபுரம் – ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798)

5) திருவானைக்காவல் – ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455)

6) திருவண்ணாமலை – அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694)

7) சிதம்பரம் – நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559)

8) ராமேஸ்வரம் – ராமநாத கோயில் (9.2881, 79.3174)

கேதார்நாத் முதல் காலேஷ்வரம் வரை இடையே இன்னும் பல சிவாலயங்கள் இதே நேர்கோட்டில் தீர்க்கரேகையில் அமைந்திருக்கலாம் எனவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச� ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

பிரிவினைவாதத்தை தூண்டுகிறது த� ...

பிரிவினைவாதத்தை தூண்டுகிறது தி மு க – நயினார் நாகேந்திரன் ''மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படவில்லை. பிரிவினை வாதத்தை தூண்டுகிறது ...

யமுனா நகரில் பல்வேறு வளர்ச்சி த ...

யமுனா நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் ஹரியானா மாநிலம் யமுனா நகரில் நிறைவேற்ற பல்வேறு வளர்ச்சித் ...

அம்பேத்கருக்கு எதிராக காங்கிர� ...

அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த செயல்கள் – பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியின்போது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர் ...

2,000 புதிய விமானங்கள் கொள்முதல் ஒ� ...

2,000 புதிய விமானங்கள் கொள்முதல் ஒப்புதல் – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி ஹரியாணா மாநிலம் ஹிசார் சர்வதேச ...

காங்கிரசை வாக்குவங்கி வைரஸ் தா� ...

காங்கிரசை வாக்குவங்கி வைரஸ் தாக்கி உள்ளது – பிரதமர் மோடி அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவை காங்கிரஸ் ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...