ஹிந்து மகா சபை குறித்து விமர்சிக்கும் கம்யூனிஸ்ட்கள் அதன் தலைவர் குறித்து விமர்சிக்காதது ஏன்?

மகாத்மா காந்தி அவர்களின் படுகொலை குறித்த பல்வேறு விவாதங்களில், ஹிந்து மகா சபை குறித்தும், வீர் சாவர்க்கர் குறித்தும் விமர்சனம் செய்யும் இடது சாரிகள், அந்த காலகட்டத்தில் ஹிந்து மகா சபையின் தலைவராக இருந்த நிர்மல் சந்திர சாட்டர்ஜி குறித்து பேசாது இருப்பது ஏன்?

மகாத்மா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, ஹிந்து மகா சபையின் தலைவராக இருந்தவர் நிர்மல் சந்திர சாட்டர்ஜீ. ஜூலை 1948ல் அவருக்கு கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக வாய்ப்பளித்தது அரசு. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட சிறிது காலத்திலேயே ஹிந்து மகா சபையின் தலைவராக இருந்தவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது வியப்பு தானே?

14 மாதங்களில் அவர் தனது பதவியை துறந்தார். மீண்டும் ஹிந்து மகா சபையோடு தன்னை இணைத்து கொண்டதோடு, பாரில் 27-29, 1951ம் ஆண்டு நடைபெற்ற ஹிந்துமகாசபையின் சிறப்பு கூட்டத்தை முன்னின்று வழிநடத்தினார். 1952ம் ஆண்டு நடந்த முதல் பாராளுமன்ற தேர்தலில் அகில பாரத ஹிந்து மகாசபையின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.1957 ல் தோல்வியுற்றார். 1962ம் ஆண்டு சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியுற்றார்.

1963ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களான ஜோதிபாசு, பவானி சென், பெனோய் சவுத்திரி மற்றும் திருதிப் சவுத்திரி ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் 'பர்த்தமான்' தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967 தேர்தலிலும் கம்யூனிஸ்ட் ஆதரவோடு வெற்றி பெற்றார். உச்ச நீதிமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வழக்குகளுக்காக வாதிட்டார். 1969 மேற்கு வங்க மாநில சட்ட சபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்தார்.

இவருடைய இளைய மகன் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், வழிக்காட்டியுமான சோம்நாத் சாட்டர்ஜி.

கோட்ஸே ஹிந்து மகா சபாவில் இருந்த காரணத்தினாலேயே, வீர் சாவர்க்கர் மீதும், ஆர் எஸ் எஸ் மீதும், மகாத்மா காந்தி கொலையில் விமர்சனங்களை வைக்கும் கம்யூனிஸ்டுகளே, மகாத்மா காந்தி கொலையான போது, அதன் தலைவராக இருந்த, அதன் பிறகும் அதன் தலைவராக செயல்பட்ட, மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மல் சந்திர சாட்டர்ஜீ அவர்களை ஆதரித்து மக்களவை உறுப்பினராகி அழகு பார்த்ததற்கு காரணம் என்ன? தொடர்ந்து ஹிந்து மகா சபையின் தலைவர்கள் மீது நீங்கள் வைக்கும் விமர்சனத்தை நிர்மல் சந்திர சாட்டர்ஜீ அவர்கள் மீது சொல்லாதது என்?

மகாத்மா காந்தி மீது உங்களுக்கு (கம்யூனிஸ்ட்) இருந்த வன்மம், காழ்ப்புணர்ச்சி தான் ஹிந்து மகா சபை தலைவரை ஆதரிக்க காரணம் என்று நாங்கள் சொன்னால் அதை ஏற்பீர்களா? மகாத்மா காந்தி கொலையில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொடர்பு உள்ளது என்று நாங்கள் சொன்னால், உங்களால் அதை மறுக்க முடியுமா?

கம்யூனிஸ்டுகளே உங்களின் இரட்டை வேடம், தேச துரோகம் தொடர் கதையா?

நாராயணன் திருப்பதி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...