1,120 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சா லைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.6,461 கோடி நிதி

தேசிய நெடுஞ்சாலைகள் இணைப்புத்திட்டத்தின் கீழ், ஐந்து மாநிலங்கள் வழியாகச் செல்லும் 1,120 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சா லைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.6,461 கோடி நிதியை ஒதுக்கீடுசெய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தேசிய நெடுஞ் சாலைகள் இணைப்பு மேம்பாட்டு திட்டத்தின் (என்.ஹெச்.ஐ.ஐ.பி.) கீழ், கர்நாடகம், பிகார், ஒடிஸா,ராஜஸ்தான், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்கள் வழியாகச்செல்லும் 1,120 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக, ரூ.6,461 கோடி நிதியை ஒதுக்கீடுசெய்ய, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங் களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல் படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் இணைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் இருவழி சாலைகளை மேம்படுத்தும் பணிக்காக இந்தநிதி ஒதுக்கப்படுகிறது. மேலும், நிலம் கையகப்படுத்துதல் கட்டணம், மறுகுடியேற்றம், புனரமைப்பு, முன்கட்டுமானம் ஆகிய நடவடிக்கைகளுக்காக இந்தநிதி செலவிடப்படும்.

இந்தத் திட்டம் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு, 429 கி.மீ. தூரத்துக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த கட்டுமானப்பணிகள் நிறைவடையும் என்றும், 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பராமரிப்புப்பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் பின் தங்கிய பகுதிகள் வழியே அமைக்கப்படும் தேசிய நெடுஞ் சாலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...