குளச்சல் துறைமுகம் முதலில் நன்மை அடையபோவது மீனவர்கள் தான்

குளச்சல் அருகே உள்ள இனயத்தில் ரூ.28 ஆயிரம்கோடி செலவில் வர்த்தகதுறைமுகம் அமைக்கப்படுகிறது. இந்த துறைமுக நிர்வாக அலுவலகம் திறப்புவிழா கருங்கல் அருகே உள்ள தொலையா வட்டத்தில்  நடைபெற்றது.

விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு இனயம் துறைமுக நிர்வாக அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டிஅளித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

குளச்சல் துறைமுகம் முதலில் மாநில அரசின் கட்டுப் பாட்டில் இருந்துவந்தது. அதை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொடுத்ததற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

குளச்சலில் வர்த்தகதுறைமுகம் அமைக்க அனுமதி வழங்கிய பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோருக்கும் நன்றிதெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

இங்கு துறைமுகம் வருவதால் குமரிமாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புமக்களுக்கும் ஜாதி, மத பாகுபாடின்றி அவரவர் திறமைக்கேற்ப வாழ்வுகொடுக்கும் திட்டமாக இது அமையும்.

மீனவர்கள் வாழ் வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தவேண்டும் என்பது இதன் நோக்கம் அல்ல. மீனவர்கள் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கடலுக்குள் மணலை நிரப்பி இந்த துறைமுகம் அமைக்கப்படும்.

துறைமுகத்திற்காக 200 ஏக்கர் நிலம்மட்டும் கரையில் எடுக்கப்படும். 4 வழிச்சாலை, ரெயில் போக்கு வரத்து அமைக்க ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படும். சிங்கப்பூர், மும்பை போன்ற இடங்களில் இதேபோல பாதி துறைமுகம் கடலில்தான் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மீன்பிடிக்க எந்த பாதிப்பும் ஏற்படாது.

சென்னை, தூத்துக்குடி, எண்ணூர், கொச்சி ஆகிய துறைமுகங்கள் அருகில் மீனவர்கள் எந்தபாதிப்பும் இன்றி மீன்பிடித்து வருகிறார்கள்.

இங்கு துறைமுகம் வந்தால் முதலில் நன்மை அடையபோவது மீனவர்கள் தான். அவர்கள் பிடிக்கும் மீன்களை இங்கிருந்து ஏற்றுமதிசெய்யலாம்.

நீரோடி முதல் குளச்சல் வரை கடற்கரை கிராமங்கள் அழிந்துவிடும் என்று புரளியை கிளப்பி விட்டு உள்ளனர். இதையாரும் நம்ப வேண்டாம். இது வீண் புரளிதான். அரசியல் நோக்கத்திற்காக சிலர் இப்படி செய்கிறார்கள்.

2017-ம் ஆண்டு துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டால் 2020-ம் ஆண்டு முதல் கப்பல் குளச்சல் துறை முகத்தில் இருந்து புறப்படும். 10- ஆண்டுகளில் குமரிமாவட்டம் சிங்கப்பூருக்கு நிகராக மாறும்.

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பழைய உச்சிக் கடை- கன்னியாகுமரி சாலை பணிக்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கடை- தோட்டியோடு சாலைக்கு ரூ.23 கோடியும் ஒதுக்கப் பட்டுள்ளது.

மார்த்தாண்டம், பார்வதிபுரத்தில் 2 மேம்பாலங்கள் அமைக்க ரூ.300கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குமரிமாவட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகள் ரூ.100 கோடியில் நடந்துவருகிறது.

குமரி மாவட்டத்தில் தொழிலாளர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு இடம் தேர்வுசெய்யப்பட்டு ரூ.106 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இரட்டை ரெயில்பாதைக்கு ரூ.3 ஆயிரத்து 400 கோடி ஒதுக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

4 வழிச்சாலை பணிக்கு 2 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் விமானம் நிலையம் அமைக்கவும் முயற்சி நடந்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.