குழந்தைகள் நலக்குழுக்களின் செயல்பாடுகளுக்கு மேனகா காந்தி அதிருப்தி

மாநில அளவிலான குழந்தைகள் நலக்குழுக்களின் செயல்பாடுகளுக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அவர் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.


மாநிலங்கள் தோறும் தேங்கிநிற்கும் குழந்தைகள் தொடர்புடைய வழக்குகள், அவற்றின் விசாரணை நிலவரம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் மேனகா காந்தி தில்லியில் சனிக் கிழமை ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவரிடம் நாட்டிலேயே மிகஅதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 439, மத்தியபிரதேசத்தில் 151, தமிழகத்தில் 132, மேற்கு வங்கத்தில் 176, உத்தரப் பிரதேசத்தில் 126, தில்லியில் 107 என்பது உள்பட மொத்தம் 1,811 குழந்தைகள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.


இதில் 470 வழக்குகள் சுமார் ஆறு மாதங்களாக எந்தமுன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் இருப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதையடுத்து, சிலமாநிலங்களின் பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர்களை மேனகா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் மாநிலங்களில் தேங்கிநிற்கும் வழக்குகளை இரு வாரங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டியது மாநில குழந்தைகள் நலக்குழுக்களின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...