ஓய்வுபெற்ற பிறகும் அரசு வாகனங்களைப் பயன் படுத்தி வரும் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக அவற்றை ஒப் படைக்கா விட்டால், சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் மத்தியபோலீஸ் அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒருகடிதம் எழுதி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
ஓய்வு பெற்ற பிறகும் போலீஸ் அதிகாரிகள் சிலர் தங்கள் வீடுகளில் பாதுகாவலர்கள் உட்பட ஏராளமான காவலர்களைப் பணியில் (சொந்த) ஈடுபடுத்தி வருவதாக புகார்எழுந்துள்ளது. இதுபோல, பல ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் அரசு வாகனங்களை பயன் படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.
இது போன்ற செயல் பொதுமக்கள் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் அடிப்படை ஒழுக்கம் மற்றும் அரசுப்பணி ஒழுக்கத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. எனவே, இந்த பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசு விரும்புகிறது.
எனவே, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இது போன்ற சலுகைகளை ஒரு மாதத்துக்குள் திரும்பப்பெற வேண்டும். இதை மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள், சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ்/மத்திய போலீஸ்துறை மற்றும் மாநில காவல் துறை ஆகியவற்றின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இந்த உத்தரவை மதிக்காத ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள்மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் பணியில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.