ஒரேபதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்த ரூ.5,500 கோடி செலுத்தப்பட்டது

ராணுவத்தில் ஒரேபதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தைச் செயல்படுத்த முதல்கட்டமாக, ரூ.5,500 செலுத்தப்பட்டு விட்டதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

தீபாவளிப் பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடிய பிரதமர் , ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறை வேற்றியிருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது,

‘ஒரேபதவி, ஒரே ஓய்வூதியம் திட்டம் 40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. முந்தைய அரசில் இருந்த சிலருக்கு இதுபற்றி தெரியாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர். நான் பிரதமரான பிறகு, இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவுசெய்தேன்.

இதனை நிறைவேற்ற ரூ.10,000 கோடி தேவை. இப் பெரியதொகையை ஒரே தவணையில் செலுத்த இயலாது. எனவே, 4 தவணைகளில் பெற்றுக் கொள்ளுமாறு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களைக் கேட்டுக்கொண்டேன்.

அவர்களும் ஒப்புக்கொண்டனர். அதன்படி, சுமார் ரூ.5,500 கோடி முதல் தவணைத்தொகை செலுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...