கடந்த 3 மாதங்களாக, பல்வேறு அராஜகங்களை நான் எதிர்கொண்டு வருகிறேன்

"சுய லாபங்களுக்காக, சந்தர்ப்பவாத அரசியலை கடைப் பிடிக்கிறது காங்கிரஸ்; பழங்கதையாகிவிட்ட அக்கட்சியை மக்கள் நம்பவேண்டாம்' என்று பிரதமர் மோடி கூறினார்.


பஞ்சாபில் அடுத்த மாதம் 4-ம் தேதி பேரவைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, ஆளும் சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணிக்கு ஆதரவாக, ஜலந்தரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசியதாவது:


தனது சுயலாபங்களுக்காக, காங்கிரஸ் கட்சி சந்தர்ப்பவாத அரசியலை பின்பற்றுகிறது. பழங்கதையாகிவிட்ட அந்த கட்சியை, பஞ்சாப்மக்கள் நம்ப வேண்டாம்.


காங்கிரஸ் ஒரு மூழ்கும்கப்பல். அதில் மக்கள் பயணிக்கவேண்டாம். எந்த இடத்துக்கு செல்லவும் அது உதவாது. தண்ணீர் போன்ற அந்தக் கட்சி, அரசியல் லாபங்களுக்காக தனது வடிவங்களை மாற்றிக்கொள்ளும்.
காங்கிரஸ் ஒருவினோதமான கட்சி. மேற்குவங்க பேரவைத் தேர்தலில் இடதுசாரிகளுடன் அவர்கள் கூட்டு வைத்தனர். இடதுசாரிகள் எத்தனை தொகுதிகள் தந்தார்களோ, அதை ஏற்றுக்கொண்டனர். இப்போது, உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதியுடன் கூட்டணி வைத்துள்ளனர். சமாஜவாதியைத் தொடர்ந்து விமர்சித்துவந்த காங்கிரஸ், சமாஜவாதியின் உள்கட்சி மோதலை வாய்ப்பாகப் பயன்படுத்தி, அந்தக்கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளது.

காங்கிரஸின் சந்தர்ப்பவாத அரசியலால், நமதுநாடு கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வந்துள்ளது. இப்போதுதான், நாங்கள் வளர்ச்சிக்கான அரசியலை தொடங்கியிருக்கிறோம்.ரூபாய் நோட்டு விவகாரம்: ரூபாய்நோட்டு வாபஸ் நடவடிக்கை, ஊழலை ஒழிப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. அதில், எவ்வித அரசியலும் இல்லை. உள்நாட்டு கருப்புப்பணத்தை வெளிக் கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்ட அந்த முடிவை, கடந்த 70 ஆண்டுகளாக சட்ட விரோதமாக சொத்துக்களை குவித்தவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதன் காரணமாக என்னைக் கடுமையாக விமர்சிக்கின்றனர்.


கடந்த 3 மாதங்களாக, பல்வேறு அராஜகங்களை நான் எதிர்கொண்டு வருகிறேன். ஆனால், எந்த அராஜகத்துக்கும் அடிபணிய மாட்டேன்  என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...