ஜம்மு காஷ்மீரை வளர்ச்சி பாதையில் புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்வதே

ஜம்மு-காஷ்மீர் மாநில இளைஞர்கள், வன் முறை, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதை கைவிட்டு மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்தார்.
காஷ்மீர் பள்ளத் தாக்கையும், ஜம்முவையும் இணைக்கும் மிகநீளமான சுரங்கப்பாதையை திறந்து வைப்பதற்காக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த பிரதமர் மோடி, உதம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:


காஷ்மீர் இளைஞர்கள், தங்களது பாரம்பரிய சூஃபி கலாசாரத்தைப் புறக்கணித்தால், அவர்கள் தங்களது நிகழ்காலத்தை இழப்பதுடன், எதிர் காலத்தையும் இருளில் மூழ்கடித்து விடுவார்கள்.
பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் காஷ்மீர் மீது குறிவைத் துள்ளார்கள் என்றாலும் அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளாத நிலையில் தான் உள்ளனர்.


ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் புதியஉச்சத்துக்கு கொண்டுசெல்வதே எனது முக்கிய குறிக்கோளாகும். இந்த மாநில வளர்ச்சிக்காக, தோளோடு தோள்கொடுத்து நிற்பேன் என்று உறுதியளிக்கிறேன். எனது நோக்கத்தை செயல்படுத்த மாநிலமக்கள் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும்.
"காஷ்மீரியம், ஜனநாயகம், மனிதநேயம்' ஆகிய வழிகளில் காஷ்மீர் மக்கள் விடுதலை பெறவேண்டும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியது நினைவுக்கு வருகிறது.


அதே குறிக்கோளுடன் நல்லிணக்கம், சகோதரத்துவம், பற்றுறுதி ஆகியவற்றுடன் இந்த மாநில இளைஞர்களின் பிரகாசமான எதிர் காலத்தை நிர்ணயிப்பதற்கு மத்திய அரசு பாடுபடும்.


செனானி-நஸ்ரி இடையே தற்போது திறக்கப்பட்டுள்ள 9 கி.மீ. தூர சுரங்கப் பாதை, மாநிலத்தின் தலைவிதியை மாற்றப்போகும் பாதையாகும். இந்தப்பாதை, பயணதூரத்தை குறைப்பது மட்டுமன்றி, வளர்ச்சியில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தும்.


மழைக் காலங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு காஷ்மீர் நெடுஞ்சாலை மூடப்படுவதால், விவசாயிகள் தங்களது விளை பொருள்களை சந்தைக்கு கொண்டுசெல்ல முடியாமல் அவதிப்பட்டுவந்தனர். இனி, அந்தப்பிரச்னை இருக்காது. அவர்கள் தங்களது விளைபொருள்களை, இந்த சுரங்கப் பாதைவழியாக சரியான நேரத்தில் சந்தைக்கு கொண்டு செல்ல முடியும். இதனால், அவர்களுக்கு வருவாய் இழப்பும் ஏற்படாது.


மேலும் இந்த சுரங்கப் பாதை திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மாநிலத்துக்கு வருவதற்கு வழிவகுக்கும். நிலச் சரிவுகளால் நெடுஞ்சாலைகள் மூடப்படாலும் அவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.

இந்த மாநிலத்தில் தவறாக வழி நடத்தப்படும் இளைஞர்கள், முதலில் கற்களின் வலிமையை உணரவேண்டும். ஒரு புறம் மாநிலத்தில் தவறாக வழி நடத்தப்படும் பள்ளத் தாக்குப் பகுதி இளைஞர்கள் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றாலும் மற்றொருபுறம் அதே காஷ்மீர்மாநில இளைஞர்கள், தங்களது கடின உழைப்பால் இந்த சுரங்கப்பாதையை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.


இந்த நேரத்தில், வளர்ச்சியா? பயங்கர வாதமா? இவற்றில் எதைத் தேர்வுசெய்வது என்பதை காஷ்மீர் இளைஞர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, காஷ்மீர் இளைஞர்கள் வன்முறைப்பாதையில் சென்றதால், மாநிலத்தில் ரத்தம் சிந்துதலும் இளைஞர்கள் உயிரிழப்பும் தான் ஏற்பட்டதே தவிர வேறு எந்தப்பலனும் கிடைக்கவில்லை.


ஆனால், அதே 40 ஆண்டுகளில் சுற்றுலாவளர்ச்சிக்கு இந்த மாநிலமக்கள் முக்கியத்துவம் அளித்திருந்தால், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக இந்தமாநிலம் உருவாகியிருக்கும். எனவே, இந்தமாநில இளைஞர்கள் பயங்கரவாதத்தைக் கைவிட்டு வளர்ச்சி பாதைக்குத் திரும்பவேண்டும் என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...