அரசியல் வாதிகள் தவறான உத்தரவு போட்டால் அதிகாரிகள் அதை தட்டிக்கேட்க தயங்கக் கூடாது

ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அரசியல் வாதிகள் தவறான உத்தரவு போட்டால் அதை தட்டிக்கேட்க தயங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவுரை கூறியுள்ளார்.

குடிமைப்பணிகள் தினத்தையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

குடிமைப் பணி அதிகாரிகள் நடுநிலைமையுடன் கடமை ஆற்றவேண்டும். முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டக் கூடாது. அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அரசியல்வாதிகள் தவறான உத்தரவு போட்டால் சட்டதிட்டத்தை எடுத்துக்காட்டும் துணிச்சலுடன் இருக்கவேண்டும். அரசுக்கு தலைமை வகிக்கும் அரசியல்வாதிகள் தவறாக செய்யச் சொன்னால் அது சட்டவிதிகளுக்கு புறம்பானது என்பதை எடுத்துச்சொல்லுங்கள். ஆவணங்களில் கையெழுத்திடாதீர்கள்.

சமூகத்தில் மாற்றம் ஏற்பட சிறப்பான பங்களிப்பு வழங்கு பவர்கள் அதிகாரிகள்தான். ஆட்சி நிர்வாக பணி அதிகாரம்மிக்க பணி. அதேவேளையில் அந்த அதிகாரம் மிகப் பெரிய பொறுப்பையும் கடமையையும் கொண்டுள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. ஆட்சி நிர்வாக பணியில் உள்ளவர்கள் கடமை ஆற்றும்போது நடுநிலைமை தவறக் கூடாது. இதுவும் இந்தபணியின் மிக முக்கிய அம்சம். நடுநிலைமை தவறும்போது முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்படும்..

சில அதிகாரிகள் முடிவு எடுக்காமல் ஒதுக்கிவிடுகிறார்கள். இந்த தயக்க நிலைமையால் நாட்டின் நலனுக்கு தீங்கு ஏற்படும்.

தேவைப் பட்டால் மூத்த அதிகாரிகளுடன் விவாதித்து தெளிவுபெற்று விடைகாணுங்கள். முடிவு எடுப்பதில் எந்தவித தயக்கமும் இருக்கக் கூடாது. இந்திய ஆட்சி அமைப்பில் வெற்றிட நிலை எப்போதும் ஏற்பட்ட தில்லை. இதற்கு ஆட்சி நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் பொறுப்புணர்வே காரணம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.