மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா தலைமையிலான அரசு ஆட்சியில் இருக்கும்நிலையில், 'இடைத்தேர்தலுக்கு பா.ஜ.க தயாராகவே உள்ளது' என மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்
மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில், விவசாயிகள் தாம்வாங்கிய கடன்களை ரத்துசெய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். போராட்டத்தின் வீச்சு அதிகரித்தநிலையில், கடந்த 11 ஆம் தேதி மாநில முதல்வர் பட்னாவிஸ், 'விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று அறிவித்தார்.
இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருந்தபோது சிவசேனா எம்பி ஒருவர், 'விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லையென்றால், மகாராஷ்டிரா அரசுக்கு நாங்கள் கொடுத்துவரும் ஆதரவு திரும்பப்பெறப்படும்' என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் பட்னாவிஸ், 'விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, சிலர் அரசுக்குக் கொடுத்துவரும் ஆதரவு திரும்பப்பெறப்படும் என்று கூறினர். அவர்கள் விருப்பப்பட்டால், அதைச்செய்யட்டும். இடைத்தேர்தலைச் சந்திக்க பா.ஜ.க தயாராக இருக்கிறது. இடைத் தேர்தல் வந்தால், வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது' என்று பேசியுள்ளார்.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.