ஆப்டிகல்ஸ் கடைகளுக்கான புதிய விதிமுறை

தற்போது ஆப்டிகல்ஸ் கடைகள் மாநில நிறுவனங்கள் சட்டப்படி அமைக்கப்பட்டு, செயல்பட்டுவருகின்றன. ஆனால், அவற்றின் மீது எந்த கண்காணிப்பும் மேற் கொள்ளப்படு வதில்லை. எனவே ஆப்டிகல்ஸ் கடைகளுக்கான விதிமுறைகளை வரையறைசெய்து, அவற்றை முறைப்படுத்த அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி.நட்டா உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் கண்மருத்துவர்கள் கொண்டகுழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்குழுவின் உறுப்பினரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கண் மருத்துவததுறை பேராசிரியருமான அத்துல்குமார் கூறியபோது, “கண் மருத்துவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இதுதொடர்பாக பேச உள்ளோம். இதற்கு முன் அரசு சார்பில் ஏதேனும் விதிகள் உள்ளனவா என ஆராய உள்ளோம். ஆலோசனையில் எடுக்கப்படும்முடிவுகள் அரசுக்கு பரிந்துரைக்கப்படும். பின்னர் இவை அமலுக்குவரும்” என்றார்.

கண் மருத்துவர்கள் மற்றும் அதன் தொழில்நுட்பம் பயின்றவர்கள் சகலவசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளில் கண்பரிசோதனை செய்கின்றனர். மூக்குக் கண்ணாடிகளுக்கு இவர்களின் பரிந்துரையை பெறுவதேசரியானது. ஆனால் ஆப்டிகல்ஸ் கடைகளே பரிசோதனை மேற்கொள்வதால் பலநேரங்களில் பிரச்சினை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே ஆப்டிகல்ஸ்கடைகளை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்திய கண் பரிசோதனை கவுன்சில் புள்ளிவிவரப்படி, நாட்டில் சுமார் 45 கோடி மக்களுக்கு கண்பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்த எண்ணிக்கை, கண் பரிசோதனைகளில் ஏற்படும் 50 சதவீத தவறுகளால் அதிகரித்துள்ளது. இதனால் சுமார் 10 லட்சம் கண்பரிசோதகர்கள் நாட்டுக்கு தேவைப்படுகின்றனர். ஆனால் தற்போது வெறும் 9,000 கண் பரிசோதகர்கள் மட்டுமே உள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...