ஏழைகள் தன்னம்பிக்கையுடன் வாழ உதவி வருபவர் பிரதமர் நரேந்திர மோடி என

பல்வேறு நலத்திட்டங்கள் மூலம், ஏழைகள் தன்னம்பிக்கையுடன் வாழ உதவி வருபவர் பிரதமர் நரேந்திர மோடி என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


 ஏழைகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் முத்ரா கடன்திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முத்ராகடன் ஊக்குவிப்புத் திட்ட முகாமின் தொடக்கவிழா, சென்னை கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முத்ரா திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார். பின்னர், ஏற்கெனவே இந்தத்திட்டத்தில் கடனுதவி பெற்று குறு }சிறு }நடுத்தர தொழிலை சிறப்பாக மேற்கொண்டுவரும் பயனாளிகள், தாங்கள் எப்படி வெற்றிபெற்றோம் என்பது குறித்து விளக்கும் நூலையும் அவர் வெளியிட்டார். 


நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது:  ஜன்தன் திட்டம் (அனைவருக்கும் வங்கிக்கணக்கு), ரூ }பே அட்டை வழங்கும்திட்டம் என ஏழைகளுக்காக, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும் ஏழை, எளியமக்கள் சுயதொழில் தொடங்கி, அதன் மூலம் அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழும்வகையில்,  முத்ரா திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.


வங்கி அதிகாரிகள் இதனை முழுமையாக செயல்படுத்த வேண்டும். தமிழக அரசும் இந்தத்திட்டத்தை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வரும்காலங்களில் இந்த சிறப்புக் கடனுதவி முகாம் மாவட்டந்தோறும் நடத்தப்படவேண்டும். அதனை அனைவரும், குறிப்பாக பெண்கள் பயன் படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் நிர்மலா சீதாராமன்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...