ஜிஎஸ்டி பொருளாதாரத்தை சரியான பாதைக்குக் கொண்டுசெல்லும்

சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) பொருளாதாரத்தை சரியான பாதைக்குக் கொண்டுசெல்லும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.


ஒருமுக வரிவிதிப்பு கொண்டு வரப்பட்டதன் மூலம் நாடு சுதந்திர மடைந்த 70 ஆண்டுகளில் பொருளாதார ரீதியில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மாற்றம்தான் இது என்றும் அவர் கூறினார்.


பிக்கி அமைப்பின் 90வது ஆண்டுக் கூட்டத்தில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:–ஜிஎஸ்டி. முறையால் வரிவருமானம் குறைந்துள்ளது. இதுபோன்ற ஒற்றைவரி விதிப்பு முறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது தொழில் துறையினர் தான்.
முந்தைய வரி விதிப்பு முறையில் மத்திய அரசு வரி மற்றும் மாநில அரசுகளின்வரி விதிப்புகள் காரணமாக சரக்குகளை எடுத்துச் செல்வது கால தாமதமானது. அதேபோல ஒருபொருளுக்கு பலமுனை வரி விதிக்கப்பட்டது. அதுவும் மாறுபட்ட வரிவிகிதங்களில் விதிக்கப்பட்டது.


மாநில அளவிலான வரிவிதிப்பு முறைகள் முற்றிலுமாக மாற்றப்பட்டு இப்போது நாடுமுழுவதற்கும் ஒரே அளவிலான வரி விதிக்கப் படுகிறது.மாநிலங்கள் வரியாக செஸ், உபரிவரி, ஆடம்பர வரி, மாநில மதிப்பு கூட்டு வரி (வாட்), வாங்கும் போது வரி, மத்திய விற்பனை வரி (சிஎஸ்டி), விளம்பரங்கள் மீதானவரி, பொழுதுபோக்கு வரி மற்றும் பல்வேறு வகைகளில் வரிகள் விதிக்கப்பட்டன.


மத்திய வரிகளாக சேவைவரி, சிறப்பு கூடுதல் சுங்கவரி (எஸ்ஏடி), கூடுதல் உற்பத்தி வரி, மத்திய உற்பத்தி வரி, கூடுதல் சுங்க வரி, மருந்துப் பொருள்கள் மற்றும் கழிவறை பொருள் தயாரிப்பு மீதான உற்பத்திவரி, ஜவுளிகள் மீதான கூடுதல் உற்பத்தி வரி என விதிக்கப்பட்டன.


ஜிஎஸ்டி முறையில் நான்கு அடுக் குகளாக 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என்ற அளவிலே வரிவிதிக்கப்படுகிறது. அதேபோல முதல்முறையாக பொருள்தயாரிப்புக்கு பயன் படுத்தப்படும் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட உள்ளீட்டு வரி திரும்பப்பெறும் வசதி அளிக்கப்பட்டுள்ளதால் முந்தைய வரி அளவைக்காட்டிலும் இது மிக மிகக் குறைவாகும்.


ஜூலை மாதத்தில் இது அமலுக்கு வந்தாலும் வரி விதிப்பு முறையில் மிகப்பெரும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. மொத்தம் வரி விதிப்புக்குள்ளாகும் 1,200 பொருள்களில் 50 பொருள்கள் மட்டுமே உயர்வரி அளவான 28 சதவீத வரம்பில் வருகின்றன. கூடுதல்வரி விதிக்கப்படும் மதுபானம், சிகரெட் உள்ளிட்ட பொருள்கள் மீதான வரி வருமானம் மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்க உருவாக்கப் பட்டுள்ள நிதியத்துக்கு சென்று அது மாநிலங்களுக்கு வழங்கப்படும்.


கடந்த மாதம் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நுகர்வோர் பொருள்களான சாக்லேட், சூயிங்கம், ஷாம்பூ, டியோடரன்ட், ஷூ பாலிஷ், டிடர்ஜென்ட், சத்துணவுபானங்கள், மார்பிள் மற்றும் காஸ்மெடிக், உள்ளிட்டவற்றின் வரி அளவுகள் குறைக்கப் பட்டன. வாஷிங் மெஷின், ஏர்கண்டிஷன் உள்ளிட்டவை மட்டும் 28 % வரி வரம்பிலேயே வைக்கப் பட்டுள்ளன.   உணவகங்கள் மீதான வரி குறைக்கப் பட்டுள்ளது. தவிர ரூ.7,500 வரையிலான ஹோட்டல் அறை வாடகை மீதான வரி 5 % அளவுக்குக் குறைக்கப் பட்டுள்ளது. வரிக் குறைப்பு பலனை நுகர்வோருக்கு அளிக்காத ரெஸ்டாரென்ட்கள், உள்ளீட்டுவரியை திரும்பப் பெரும் வசதி ரத்து செய்யப்படும் என்றார். இது பொருளாதாரத்தை சரியான பாதைக்குக் கொண்டுசெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...